மும்பை "நாம் தமிழர்" தோழர்களுக்கு நன்றி!

Category :



உண்மையிலேயே நாம் தமிழர் மும்பையில் நடத்திய‌
அமிதாப்பச்சன் வீட்டு ஆர்பாட்டத்தில் பயன் கிடைக்கலாம்
எனத் தெரிகிறது.

ஆம், அமிதாப் பச்சன் தன் " வலைப்பதிவில்" கூட இது
குறித்து எழுதியுள்ளார்.

IIFA-International Indian Film Acadamy -ன் இந்திய திரைப்பட விழா விருது,
ஜுன் மாதம் இலங்கையில் நடக்க இருப்பது அறிந்ததே.இதை ஸ்பான்சர்
செய்யும் சாக்கில் இலங்கை, "இந்திய திரைப்பட நடிகர்களையும்,
இதனால் வரும் பெயரினால் தன் நாட்டுக்கு வரும் உல்லாச பயனிகளை
ஈர்க்கவும் (பேரினவாத சிங்கள அரசு) தந்திரமாக செயல்படுகிறது.
//
Everyone says that Sri Lanka is a small country, but I don’t think so. The size of a

country is judged by the size of her heart and I have seen that Sri Lankan’s has a big heart,” said Amitab Bachchan at the press conference held to officially announce Sri Lanka as the IIFA destination for 2010. //-Amitab Bachan பேசியது.

இந்த வலையில் இந்திய நடிகர்களை தடுத்து, தமிழர்களின் உணர்வுகளை
மதிக்கச் செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை.

இன்னும் நிறைய "இந்தி"யர்கள் இலங்கையின் உண்மை வரலாற்றை தெரியாமல் தான் உள்ளனர்.இப்போதாவது நாம், நம் எதிர்ப்பை அமைதியான‌
வழியில் தெரிவிப்போம்.

தயவு செய்து அமிதாப்புக்கும், உங்கள் எதிர்ப்பை நாலு நல்ல வார்த்தையில்
தெரிவியுங்கள்.குறிப்பு:அமிதாப்பச்சனின் வலைப் பதிவிலும் நம் ஆதங்கத்தை தெரிவிக்கலாம்.

http://bigb.bigadda.com/
அமிதாப் பச்சன், மின்னஞ்சல்:amitabhbachchan@gmail.com
IIFA, Mumbai மின்னஞ்சல் :iifa@iifa.com

சாரு-வின் மீசையைக் காணோம்?

Category :


பிரபல(!) எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ஒரு பக்க‌
மீசையைக் காண‌வில்லை என‌ அவ‌ருடைய‌ அடி வ‌ருடிக‌ள்
தெரிவித்து உள்ள‌ன‌ர்.இரு தின‌ங்க‌ளாக‌ சாரு,த‌லை ம‌ற்றும்
"வ‌லை" காட்டாம‌ல் முட‌ங்கி கிட‌க்கிறாராம்.போலிசுக்கு போனால்
த‌ன்னை அமுக்கி விடுவார்க‌ள் என்ற‌ ப‌ய‌த்தினால்...வீட்டுச்
சிறையில் உள்ளாராம்.

குற்ற‌ம் புரிய‌ துணை போவ‌த‌ற்கும் நம்ம‌ இ.பி.கோ த‌ண்ட‌னை உண்டு
என்ப‌தால்.ப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ நித்யான‌ந்த‌ருக்கு,ஆள் பிடித்து(வாச‌க‌ர்க‌ள்)
அனுப்பி கூட்டு வியாபார‌ம் செய்த‌து இவ‌ர் தான் என்ப‌தால் க‌ண்டிப்பாய்
த‌ண்ட‌னை உண்டு.

நித்தியா....த‌ன் "க‌ல்ப‌த‌ரு"வை ந‌டிகை ர‌ஞ்சிதாவிட‌ம்
காட்டி...நாடு சிரித்து இப்போதுதான் அட‌ங்கியிருக்கிற‌து.
நித்தியா...த‌லைம‌றைவாகிய‌வுட‌ன்....ந‌ம்ம‌ நித்தியாவின் சீட‌ர்(புரோக்க‌ர்)
சாருவின் வ‌லைத‌ள‌மும் த‌லைம‌றைவாகிவிட்ட‌து.அவ‌ரின் எழுத்தை
அவ‌ச‌ர‌,அவ‌ச‌ர‌மாக‌ ர‌ப்ப‌ர் வைத்து அழித்தும்,...பாவ‌ம்...அந்த‌ வ‌ண்ட‌
வாள‌ங்க‌ள் இன்னும் வ‌லையில் வ‌ல‌ம் வ‌ருகின்ற‌ன‌.
த‌ன் வ‌லைப்ப‌க்க‌தில் இருந்த "நித்தியா க‌ட‌வுளை"அழித்துவிட்டு பார்த்தால்
அது அடுத்த‌ வ‌லைப்ப‌க்க‌த்தில்....அதிர்ச்சியில் சாரு.எல்லாம் அவ‌ன் செய‌ல்.

சாரு இப்போது த‌ன் இழி செய‌லால்,ம‌ன‌ம் உடைந்து த‌ன் குற்ற‌ உண‌ர்ச்சியினால் ப‌ய‌ந்து ந‌டுங்கிபோயுள்ளார் என‌த் தெரிகிற‌து. இனியாவ‌து சாரு மாதிரியான‌ எழுத்து வியாபாரிக‌ள் த‌ன் சொந்த‌ வியாபார‌த்தை க‌வ‌னித்தால் ந‌ல்ல‌து. கூட்டு இடம் பார்த்து சேருவது நல்லது.???
நீங்கள் இலக்கியம்,பின் நவீனத்துவம்,முன் நவீனத்துவம் என எந்த எழுத்தையாவது எழுதுங்கள்.பிடித்திருந்தால் படிக்கிறோம்,இல்லையெனில்
வேறு எழுத்தை படிக்கப் போய்விடுகிறோம்.

ஆனால் "சாமியார்களுக்கு" ஆள் சேர்க்கவும்,அவ‌ர்களின் லீலைகளை
எழுத்தில் திணிக்காதீர்கள்.அவர் "கடவுள்" எனவும்,எத்தனையோ "கான்சர்"நோயை
கண் முன்னே தீர்த்தவர் எனக்கூறி அப்பாவி வாசகர்களை ஏமாற்றாதீர்கள்.கள்ள சாமியார்களுக்கு உங்களை விட‌ நல்ல புரோக்கர்கள் வெளியில் கிடைப்பார்கள்.

ஆ...மறந்துட்டேனே..,மாயமான அந்த ஒரு பக்க மீசை இன்னும் ஒரிரு
தினங்களில் கிடைத்துவிடும் என ஒரு சுவாமி தெரிவித்துள்ளாராம்.
மீசை கிடைத்தவுடன் "முகம்" முழுமையாய் வலையேற்றப்படும்.

"கக்கூசை திற...நாற்றம் போகட்டும்"-‍‍சுவாமி நிவேதானந்தா.



சாருவின் சில பிதற்றதல்கள் மற்றும் அசிங்க எழுத்துக்கள் கீழே:
கடவுளைக் கண்டேன் : சர்வரோக நிவாரணம் (7) “சாமியைப் பார்க்க வேண்டுமானால் பெங்களூர் செல்ல வேண்டுமே; இந்தக் காலை வைத்துக் கொண்டு எப்படிச் செல்வது? ” என்றேன்.

எப்படியோ தாங்கித் தாங்கி நடந்து பெங்களூர் போய் சேர்ந்து விட்டோம். நித்யானந்தரின் தரிசனம். பக்தர்களுக்கு நித்யா வரம் கொடுக்கும் நேரம்.

என்னைப் பார்த்து ” என்ன வேண்டும் ஐயா? ” என்று கேட்டார். நான் அவந்திகாவை சுட்டிக்காட்டி ” கடந்த ஐந்து ஆண்டுகளாக மாற்றி மாற்றி இவளுக்கு ஏதாவது ஜூரம் வந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் சாமி. இதை சரிப்படுத்த வேண்டும் ” என்றேன். அப்போதைய பிரச்சினையான கால் வலியைப் பற்றியும் சொன்னேன்.

” அப்படியா? அம்மா இதுபற்றி எதுவும் சொன்னதில்லையே? ” என்று சொல்லி விட்டு, தன் கையிலிருந்த ஒரு செங்கோல் மாதிரியான ஒரு தண்டத்தை அவந்திகாவின் காலில் வைத்தார்.”

நித்யானந்தா: கபட வேடதாரியின் கலைந்த முகம்:


‘’நித்யானந்தரிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதுவதாக இலக்கியத்தில் மாமா வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் எழுதியிருக்கிறார். ஒரு லட்சம் கொடுத்தாலே சினிமாக்காரனின் குண்டியை நக்கத் தயாராக இருக்கும் இவர்களைப் போன்றவன் நான் அல்ல. நித்யானந்தரின் கூட்டத்துக்குப் போக வேண்டுமானால் கூட ஆயிரம் ரெண்டாயிரம் என்று பணம் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறேன். இன்னமும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவு எனக்கு 4000 ரூ . பாக்கி. அவருடைய எழுத்தை டைப் செய்து கொடுக்கும் டைப்பிஸ்ட் என்னை வந்து பணம் கேட்ட போது ஆசிரமத்தின் பப்ளிகேஷன் டிவிஷனில் ‘நீங்கள் கொடுத்து விடுங்கள்; நாங்கள் உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்” என்று சொன்னதால் கொடுத்தேன். இன்னமும் அந்தப் பணம் வந்து சேரவில்லை.
ஒருவரை ஏமாற்றினாலே சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இந்தக் கபட சாமியார் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியிருக்கிறார்.

ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது ஒருவருடைய அந்தரங்கமான விஷயம். அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை. ஆனால் நித்யானந்தர் மிக உயரிய ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசி விட்டு இப்படி ப்ளோ ஜாப் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். மற்ற எல்லா விஷயங்களிலும் ஓஷோவின் சிந்தனைகளையே தன்னுடையதாக எடுத்துக் கொண்ட இந்த நித்யானந்தர் ஓஷோவின் செக்ஸ் வாழ்க்கையை ஏன் விட்டு விட்டு அதை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டார்? பிரேமானந்தரிலிருந்து தமிழ்நாட்டு சாமியார்கள் அத்தனை பேரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?


இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான். ஆனால் நித்யானந்தர் தனது அளப்பரிய சக்தியை நடிகைகளின் குண்டியை நக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை. ‘’//



இந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட்ட‌ ஈழம்?

Category :

லங்கையில் 2009 மே மாதம் நடந்து முடிந்த இரக்கமற்ற மனிதப் பேரழிவை நிகழ்த்தியதில் இந்தியாவின் பங்கும் உண்டு என்பதை உல‌கமே அறியும். அப்பாவி தமிழ் மக்களின் உயிரை குடித்து உலக‌ நாடுகள் தன் பயங்கரவாத வெறியை தீர்த்துக்கொண்டன. நியாயமான‌ உரிமைப் போராட்டத்தை திட்டமிட்டு அழித்தனர். தமிழனுக்கு நாதி இல்லை என்ற ஒரே காரணத்தினால். போரின் உச்சகட்டத்தின் போது, உலகத் தமிழர்கள் ஒப்பாரி இட்டும், கெஞ்சியும் இந்தியா சிறிதும் இரக்கமில்லாமல்,கொடிய சிங்கள் அரசுக்கு மட்டுமே ஆதரவாய் இருந்ததை உலகத் தமிழினம் என்றுமே மறக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் என்ற தியாகத் தீ அனைவரையும் வீதியில் இறங்கி போராட வைத்தது. ஈழம் ஒன்றே தீர்வு என் ஒரே குரலில் உரக்கத் தெரிவித்தும், காங்கிரசு, கலைஞரை வைத்து விளையாட்டு காட்டியது. அதுதான் உண்ணாவிரதம்... . உட‌னடி போர் நிறுத்தம்... கலைஞரின் மக்கள் போர் "அய்யகோ" என தொடர்ந்தது... .

இப்போது போர் முடிந்து அரையாண்டு முடிந்தும், முள்வேலி த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் மீள‌ முடியாம‌ல் த‌விக்கின்ற‌ கொடூர‌த்தை இந்தியா உட்ப‌ட‌ உல‌க‌ நாடுக‌ள் ப‌ல, க‌ண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டு தான் உள்ளன. கொடிய‌ சிங்க‌ள‌ அர‌சுட‌ன். இல‌ங்கை அரசு தூத‌ர்,இந்தியாவிட‌ம் கொடுத்த‌ வாக்கு ச‌ன‌வ‌ரி 10,2010 க்குள் அனைத்து த‌மிழ‌ர்க‌ளும் சொந்த‌ இட‌த்திற்கு மீள் குடிய‌ம‌ர்த்த‌ப்ப‌டுவ‌ர் என‌; ஆனால் இன்னும் ஒரு ல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் வ‌தை முகாமுக்குள் தான் அடைப‌ட்டுக் கிட‌க்கின்ற‌ன‌ர். ஆனால் இந்தியா ஒன்றுமே செய்யாம‌ல்,வேடிக்கை பார்த்துக்கொண்டு... . த‌ங்க‌ள‌து வியாபாரத்தை அமோகமாக ஆர‌ம்பிக்க‌... . !!!

ஏதோ தற்போது மேற்குலக நாடுகள் கூட பேசுவது, புலம் பெயர் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான போரட்டத்தினால் தான். இன்னமும் சேனல் 4(Channel-4 TV) ஒளிபரப்பிய கொடுமையான கொலைக்காட்சிகளை பெரிய அளிவில் நிறைய‌ நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை.

ரத்தவாடை நீங்குவதற்குள் நிறைய நாடுகள் தங்கள் வியாபாரத்திற்கும், சுய‌நலத்திற்காகவும் இலங்கையில் நுழைய வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இதனிடையே "ஜனாதிபதி" தேர்தலும் முடிந்து, மகிந்த தன் குடும்ப‌ ஆட்சியை காப்பாற்றிவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகா-விற்கு ஆதரவு செய்து தமிழர்களின் வாக்கினை ஓரளவு பெற்றும் இருந்தனர்.

இதனிடையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அடிக்கடி இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இந்தியாவிடம் என்ன‌ பேச‌ப்போகிறார்க‌ள்? என்ன எதிர்பார்க்கிறார்கள்... . ? இந்தியா, இல‌ங்கை பிர‌ச்சினையில் நுழைந்த‌து... த‌ன் சுய நலத்திற்குத்தானே த‌விர‌ ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் மேல் உள்ள‌ உண்மையான‌ அக்க‌றையினால் அல்ல‌. த‌விர‌ இந்திய‌ நிறுன‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் அதிக‌ரித்து கொண்டே செல்வ‌தினால் இந்தியா, இல‌ங்கையிட‌ம் நியாய‌ம் பெற‌ முடியாது. சுமார் 100 பெரிய‌ தொழில் நிறுவ‌ன‌ங்க‌ள் வியாபார‌த்தை ஆர‌ம்பித்து விட்டன‌. க‌டைசியாக‌ நுழைந்த‌து ஏர்டெல்(AIRTEL). த‌ற்போது அர‌சின் பொதுத்துறை நிறுவன‌ங்க‌ளும் வ‌ரிசையில்... . ?

இந்தியாவின் தற்போதைய‌ முத‌லீடு சுமார் 400 மில்லிய‌ன் டால‌ர்-க்கு மேல். ஆகையினால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் இந்தியாவை ந‌ம்பாம‌ல், த‌ம்மை அடுத்த‌ க‌ட்ட‌ எழுச்சிக்கு த‌யார் செய்து கொள்ள‌ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். இதில் புலம் பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்கு அதிக‌ம் இருக்கும். இனி "த‌மிழ் ஈழ‌ம்"என்ப‌து மக்களின் எழுச்சியான‌ அர‌சிய‌ல் போர‌ட்ட‌த்தினால் ம‌ட்டுமே... சாத்திய‌ம்.

இந்தியாவின் வெளிவுறவு கொள்கை என்பது... சுயநலத்தினால் பிணைந்தது. ஒரு பக்கம் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுவார்கள்... ஆனால் செயல் நேர்மாறானது... ஜனநாயகத்தை மிதிக்கும் 'மியான்மார்" நாட்டுடன் வியாபார நெருக்கம்... சூடானில் கச்சா எண்ணைக்காக கூட்டு, நேபாள‌ ம‌ன்ன‌ராட்சியை தாங்கிய‌து என உதாரண‌ங்கள் நிறைய‌.

இனியாவது ஈழத்தமிழர்கள், உலகமெங்கும் பரவிய தமிழர்கள் விழித்துக்கொள்ள‌ வேண்டும். உலகத் தமிழர்கள் ஒன்று படவேண்டும். தமிழக அரசியல்வாதிகளிடம் கையேந்தாமல் அடித்தட்டு மக்களிடம் செல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஈழத்தின் மேல் பாசம் கொண்டவர்கள்.

ஆக அரசியல் சாணக்கியத்தை எதிரிகளிடமிருந்தே படித்தாக வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் உள்ள‌ன‌ர் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள்.


நன்றி:கீற்று
மீள் பிரசுரம்-எண்ணத்துப்பூச்சி

இன்று...மாவீரன் கட்டபொம்மன் பிறந்த நாள்.!

Category :


இன்று....தமிழர்களின் வீரத்தை வெளிச்சம் போட்டவனின் பிறந்த நாள்.ஆங்கிலேயர்களை எதிர்த்து,சுதந்திரத்திற்கு போராடிய‌ ஒரு தமிழன்.அனைத்து த‌மிழ‌ர்க‌ளும் இன்று ஒரு நாளாவ‌து ந‌ம் வ‌ர‌லாற்று நாய‌க‌ர்க‌ளை ஞாப‌க‌ம் கொள்வோம்.

ஆகவே அம் மாவீரன் நினைவாக எழுதப்பட்ட கட்டுரை கீழே.....

எழுதியவர்:இரா.ராமச்சந்திரன், இணையம்:தமிழ்நேசன் http://www.tamilnation.org/


"உலகின் உயிரின பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ற படைப்பு மிக உன்னதமாகக்கருதப்படுகின்றது. உலகம் தோன்றியது முதல் இன்றைய காலகட்டம் வரை பிறந்து மறைந்தவர்கள் எல்லோரும் நம் நினைவில் நிற்கமுடியாத நிலை. ஆனால் காலத்தால் மறைக்க முடியாத மனிதர்கள் இன்றும் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அத்தகைய சிறப்பை அவர்கள் பெற்றதற்கு காரணம் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த அவர்களின் குணாதியங்கள்கள்தான். அப்படி வாழ்ந்து மறைந்த மாவீரனாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.



03-01-1760 ல் அழகிய வீரபாண்டியபுரத்தில் (இன்றைய ஒட்டப்பிடாரம்)பிறந்தார். இவருடைய தந்தை ஜெகவீரபாண்டியன். தாய் ஆறுமுகத்தம்மாள். கட்டபொம்மனின் முன்னோர்கள் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்கள. விஜயநகர பேரரசினரால் புலம் பெயர்ந்தவர்கள் எனக்கருதபபடுகின்றது. .இவர்களின் மூனறு புதல்வர்கள்தான் கருத்தையா என்ற வீரபாண்டிய கட்டபொம்மன், தளவாய் குமாரசாமி என்ற துரைசிங்கம் மற்றும் செவத்தையா என்ற ஊமைத்துரை.

இவர்களின் முன்னோர்கள் தெலுங்கு நாட்டின் பிரசித்திபெற்றவர்கள். கெட்டி பொம்முலு என வீரத்துக்கு அடையாளமாக சொல்லப்படும் சாஸ்த்தா அய்யணசாமி என்ற தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பெற்றவர்கள். அந்த வீரத்துக் காவல் தெய்வமாகக்கருதப்பட்டதனால் என்னவோ பிழைக்க வந்த வெள்ளையர்களுக்கு கட்டபொம்மன் ஒரு சிம்மசொப்பனமாகத்திகழ்ந்தார்.

சங்க காலத்தமிழ் காப்பியங்களில் வீரத்தமிழ்மன்னர்கள் தம் நாட்டு மக்களின் துயர் தீர்க்க தன்னுயிரையும் தர இசைந்தார்கள். தாய்ப்புலி தான் ஈன்ற குட்டிகளை தன்னுயிர் போனாலும் கவர்ந்து செல்ல யாருக்கும் அனுமதியளிக்காது. அவ்வாறே ஒரு மன்னன் தன் நாட்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக அன்றைய தமிழ் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என புறநானூற்றுப்பக்கங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இதற்கு உதாரணமாகத்திகழந்தவர் கட்டபொம்மன். தம் எதிர்கால மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காக கொண்டகொள்கைகளை கடைசிவரை காப்பாற்றி தமிழகத்தின் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டு நிற்கின்றார்.

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் மூதாதையர்களில் ஒருவர் காலத்தில் நடந்ததாகக்கருதப்படும் கதைகளில் ஒன்று இன்றும் பேசப்படுகின்றது. ஒரு நாள் வேட்டையாடும் நேரத்தில், வேட்டை நாய்களினால் துரத்தப்பட்டு வந்த முயலொன்று குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் வேட்டை நாய்களை நோக்கி முயல் சீறிப்பாய்ந்ததாகவும் அதைக்கண்ணுற்ற அன்றைய கட்டபொம்மர் அதுவே தாம் கோட்டை கட்டுவதற்கு உகந்த இடம் எனத்தீiமானித்து அவ்விடத்திலேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவியதாகவும் கூறப்படுகின்றது.

கருத்தையா என்ற வீரபாண்டியன் 02.02.1790ல் கட்டபொம்மர்களின் வாரிசாக கருதப்பட்டு ஆட்சி அமைக்க அன்றைய மதுரைப்பாளையர்க்காரர்களால் அனுமதிக்கப்பட்டார். கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னனாகப் பொறுப்பேற்றார்.
1736 க்கு முன் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் மதுரை நாயக்கர் வம்ச அரசர்களால் பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு சந்தாப் சாகேப் ஆர்கோட் என்பவரால் மதுரை அங்கு கடைசியாக ஆண்ட ராணியிடமிருந்து பறிக்கப்பட்டு நவாப் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் பெருமளவில் சுரண்டப்பட்டதின் காரணமாகவும் மக்கள் மிக்க அதிருப்தி கொண்டிருந்தனர்.

அத்துடன் இஸ்லாமிய ஆட்சிமுறையை பெரும்பாலான பாளையக்காரர்கள் எதிர்க்கத்துணிந்தனர். இத்தகைய போக்குகள் இறுதியில் ஆர்க்காடு அரசினை வெள்ளையர்களிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. சரியான தருணம் பார்த்திருந்த ஆங்கிலேயர்கள் ஆர்க்காடு நவாப் அரசுக்கு கொடுத்துள்ள கடனுக்காக நவாப்பிடமிருந்து வரிவசுலிக்கும் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடமிருந்து தாறுமாறாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்.
வரியை மக்களிடமிருந்து வாங்கிக்கொடுக்காத பாளையக்காரர்கள் கொடுமைக்காளானார்கள். இத்தகைய நிலை ஏறத்தாழ 40,50 ஆண்டுகள் நீடித்த நிலையில்தான் பாஞ்சாலஞ்குறிச்சியில் கட்டபொம்மன் ஆட்சிக்கு வந்தார். மக்களின் வரிப்பணம் பாலாக்கப்பட்டு நிர்வாகம் தறிகெட்டுக்கிடந்த ஒரு காலகட்டத்தில் மக்களை புரட்சியிலிருந்து ஒடுக்குவதற்கு ஆங்கிலேயர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இத்தகைய போக்கு பிரச்சனைகளை மேலும் மோசமாக்குவதாக அமைந்தது.

இத்தகைய குழப்பமான நிலையில் ஆங்கிலேயர்கள் தங்களுக்கேயுரித்தான பிரித்தாழும் சதிவேலைகளை மேற்கொண்டு மக்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தினார்கள்.
இக்காலகட்டத்தில் ஆஙகிலேயரின் ஒடுக்குமுறைக்கு சற்றும் சளைக்காமல் கட்டபொம்மன் அவர்களுக்கு வரி சேகரித்துக் கொடுப்பதை நிறுத்தினார். புல அச்சுறுத்தலுக்களுக்கும் பணியாமல் கட்டபொம்மன் தன் நிலையில் உறுதியாக இருந்தார். இதனால் கட்டபொம்மனை வஞ்சக வலைவிரித்து கவிழ்க்கத் தருணம் பார்த்திருந்தார்கள். கட்டபொம்மனின் மந்திரியாக செயல்பட்டு வந்தவர் தானாதிப்பிள்ளை அவர்கள்.

பிரதான தளபதியாக அமைந்தவர் சுந்தரலிங்கம் என்று அறியப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்காக தன் இன்னுயிரைத் தியாகமாக்கியவர். மதுரை பாளையக்காரர்களால் அணைவரிடமிருந்தும் கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் கொட்டம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர். அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள்.
பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடம் இராமநாதபுரம் சேதுபதி ராஜா மாளிகை. பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் ஜாக்ஸன் துரை. கட்டபொம்மன், தானாதிபிள்ளை மற்றும் தன் குழுவினருடன் இராமநாதபுரம் சென்றார். அங்கே நடந்த பேச்சுவார்தை தோல்வியாகி கைகலப்பில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். ஆனால் தானாதிப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கைக்காக ஜாக்ஸன் துரை பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி ஆலோகனையின்பேரில் திருநெல்வேலி கலெக்டர் கட்டபொம்மனுக்கு வரி கொடாமைக்கு காரணம் கேட்டு கடிதம் 16..03.1799ல் அனுப்பினார். இதற்கு கட்டபொம்மன் வரி செலுத்த வேண்டிய பணம், தானியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டதாக பதில் அனுப்பினார்.

கட்டபொம்மனின் தலைவணங்காத்தன்மை வெள்ளையர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியது. கட்டபொம்மனை நாட்டின் பொது எதிரியாக்கி தீர்மானம் நிறைவேற்றினர். தங்கள் நயவஞ்சக திட்டத்துக்கு கட்டபொம்மனுக்கு எதிராக எட்டப்பனை தேர்ந்தெடுத்து கட்டபொம்மனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆராய்ந்து சரியான தருணம் பார்த்து இராணுவத்தளபதி பாணர்மேன் தலைமையில் பாஞ்சாலம்குறிச்சி கோட்டையை தகர்க்கும் திட்டமத்தை உருவாக்கி,. கேர்னல் கொலினிஸ் தலைமையில் கோட்டையின் நாலாபக்கமும் தாக்குதல் நடத்தினார்கள்.
வெகு சுலபம் என எதிர்பார்த்த கொலின்ஸ் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பின்வாங்கி மேலும் ஆயுதங்கள் தேவை என செய்தி அனுப்பினார். இதைப்பயன்படுத்தி கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிச்சென்றார். பெருத்த ஏமாற்றத்துக்குள்ளான வெள்ளையர் கட்டபொம்மன் தலைக்கு விலை வைத்தார்கள். தானாதிப்பிள்ளை முதலிய 16 பேரை கைது செய்து அழைத்துச்சென்றார்கள். கைது செய்யப்பட்ட தானாதிபிள்ளையின் தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்கென பொது இடத்தில் வைத்தார்கள்

கட்டபொம்மன் புதுக்கோட்டை ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் வெள்ளையரின் வஞ்சனையின் காரணமாக கட்டபொம்மன் சரணடையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
16.10.1799 ல் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குப்பிறகு, இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவருடன் சேர்ந்து தங்கள் இன்னுயிரைத்தந்த வீர மறவர்கள் என்றென்றும் போற்றுதற்குறியவர்கள்.
கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கிய எட்டப்பன், எட்டயபுர ராஜாவாக ஆக்கப்பட்டு அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. பாஞ்சாலஞ்குறிச்சி கோட்டை கொள்ளையடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.


ஆனால் வீரபாண்டியகட்டபொம்மன் என்ற மாமனிதனின் பெயர் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்த அவரின் தியாகத்தை போற்றுவோமாக.
கட்டபொம்மனின் நினைவு என்றும் போற்றத்தக்க வகையில் கயத்தாற்றில் அவருடைய சிலையும், பாஞ்சாலஞ்குறிச்சியில் கோட்டையும் நிலைபெற்றுள்ளது.
விடுதலைக்கு விலையாக பாஞ்சாலஞ்குறிச்சி என்ற ஊரும் கோட்டையும் அன்று வெள்ளையர்களால் மண்மேடுகளாகப்பட்டது. இந்திய சரித்திரத்தில் ஜல்லியன் வாலாபாக் படுகொலை மிகப்பெரியதாக கருதப்படுகின்றது. அகைவிட பலமடங்கு பெரிய தியாகங்களை தமிழர்கள் இந்திய விடுதலைக்காக ஆற்றியுள்ளனர் என்பதற்கு பாஞ்சாலஞ்குறிச்சி ஒரு உதாரணமாகும்.

நானும் சாமி தான்?

Category :



வேசம் போட்டு
வேடிக்கை காட்டினேன்,
வயிற்றை நிரப்ப...
வீதி,வீதியாய் விதியே
என்று திரிந்தாலும்....
ஐம்மது பைசா,அதிகமாய்
போனால் ஒரு ரூபாய்,இலவசமாய்
ஏளனப்பார்வையும்,பேச்சும்.

என்னை மாதிரியே ஒரு
சிலை தெருவோரம்..,
அங்கே வ‌ருப‌வ‌ர்க‌ள்
வேடுக்கை காட்டுவார்க‌ள்...?
அங்கேயும் ஒரு உண்டி உண்டு,
அத‌ன் வாய் நிர‌ம்பி,
அரைகுறையாய் சிரித்த‌து,
ஒரு "ப‌த்து ரூபா" நோட்டு.

மம்மி டாடியும்,ஆண்டி அங்குளும்.....

Category :



சில ஆண்டுகளாய் தாய் தமிழ், சீர் கெட்டு சிரிக்கும் நிலைக்கு வந்து,இப்பொது வெந்தும் விட்டது.



காணும் இட‌மெல்லாம் த‌மிங்கிலிஷ் மொழியில் ந‌ம் ம‌க்க‌ள்.த‌மிழ‌க‌ அர‌சும் த‌ம் ப‌ங்கிற்கு நாச‌ப்ப‌டுத்திக்கொண்டு.....பேருந்து ப‌ய‌ண‌ச்சீட்டில் இருந்த‌ த‌மிழை கூட‌ அழித்துவிட்டு,ஆங்கில‌ துண்டு சீட்டு.த‌னியார் நிறுவ‌ன‌ பேருந்துக‌ள் கூட‌,அழ‌கான‌ த‌மிழில் க‌ணிணிச் சீட்டு வ‌ழ‌ங்குகின்ற‌ன‌.


இன்னும் பெரும்பான்மையான‌ ம‌க்க‌ள் முத‌ல் எழுத்தை ஆங்கில‌த்தில் தான் எழுதி அசிங்க‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌ர்.உல‌கிலேயே த‌மிழ‌க‌ த‌மிழ‌ன் தான் இந்த‌கொடுமையை ர‌சிக்கிறான்.....உல‌கில் வேறு எந்த‌ மொழியும்,இன‌மும் இப்ப‌டி எழுதுவ‌தில்லை.
இதில் அமைச்ச‌ர்களும் அட‌ங்கும்.....


குறிப்பாக‌ அனைத்து ம‌ழ‌லைய‌ர் ப‌ள்ளியில் அப்பா,அம்மாவை கொன்றேவிடுகின்ற‌ன‌ர்.இது த‌மிழை அழிக்க‌ முனையும் நாச‌கார‌ர்க‌ளின் திட்ட‌மிட்ட‌ ச‌தியோ என்று கூட‌ என்ன‌த் தோன்றுகிற‌து.


இந்த‌ த‌மிழ் கொலைகார‌ர்க‌ளை திருத்த‌ எத்த‌னையோ த‌மிழ் அமைப்புக‌ள்,இய‌க்க‌ங்க‌ள் இருந்தும் ஒரு மாற்ற‌மும் இதுவ‌ரை நிக‌ழ‌வில்லை.


எம் த‌மிழின‌ கொலைகார‌ர்க‌ளே மொழி ஒரு இன‌த்தின் அடையாள‌ம்...அதை சிதைப்ப‌து ஒரு பாவ‌ச்செய‌ல்.


முழுமையான‌ ஆங்கில‌த்தில் கூட‌ எழுதுங்க‌ள்,பேசுங்க‌ள்.....ஆனால் த‌மிங்கிலிஷ்‍-ல் ம‌ட்டும் பேசாதீர்க‌ள்.....எழுதாதீர்க‌ள்...

இந்தியா செய்த தமிழினப் படுகொலை?

Category :

என்னுள் இருந்த இந்தியன் படுகொலை செய்யப்பட்டு விட்டான்.இனி நான் என்ன தான் "இந்தியன்" என்று கூறினாலும் அது நடிப்பாகத்தான் இருக்கும்.

என்நாடு செய்த பாவத்தில் எனக்கும் பங்கு உண்டு.தமிழினம் என்று வேண்டாம்,மனித இனம் என்ற அடிப்படை கரிசனம் இல்லாமல் நடந்து கொண்ட இந்தியா, அதற்கான தண்டனையை பெற்றே தீரும்.
நியாய, தர்மத்தை பேச இந்தியாவுக்கு இனி அருகதை இல்லை.26 ஆம் தேதி நடந்த ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் கூட‌ நியாயத்தை பேசாமல், இலங்கை பயங்கரவாத அரசின்" கைப்புள்ள" யாக நடந்து கொண்டது கேவலம்.
இந்தமாதிரி தவறான வெளியுறவு கொள்கைகளினால் தான் மக்களின் ஆதரவை பல நாடுகளில் இந்தியா இழந்தது.குறிப்பாக‌ நேபாளம்,பங்களாதேஷ்...அரசாங்கம் செய்யும் தவறை சுட்டிகாட்ட வேண்டிய பொறுப்பு இந்தியா போன்ற ஜனநாயக‌ நாட்டுக்கு உண்டு.ஆனால் இந்தியா தவறான அரசு அதிகார‌வர்க்கத்தினால் தவறான கொள்கைக்கு வழி அமைத்து மீறவும் செய்கிறது.

உதாரணம்:
1.மியான்மார் உடன் உறவு‍‍‍- அந்த அரசு அப்பட்டமான மனித உரிமை மீறல் செய்தும்,நம்மால் நியாயத்தைக் கூட கேட்க இயலாமல் உள்ளோம்.
2.திபெத்-இந்தியாவை நம்பி வந்தவர்களுக்கு இன்னும் ஒரு படிமுன்னேற்றம் கூட இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை ஏமாற்றியது.
3.சூடான்-அங்கு தர்பூரில் இரு மாபெரும் இனப்படுகொலை நடத்திய அரசுடன் ''வியாபாரம்" செய்வது....ஓ.என்.ஜி.சிஅரசு நிறுவனம் நிறைய மில்லியன் கொட்டியுள்ளது.(குருடு ஆயில்=க்காக)

கடைசி வெறி:

இந்தியா மூச்சுக்கு மூச்சு "இறையான்மை" பற்றி பேசுகிறது.அதே இறையான்மையை சொல்லி ஒரு "கொலைஞரும்" மூத்திரம் விடுகிறார்.பதவி பெற பல்லக்கில் செல்கிறார், புதுடில்லிக்கு.ஆனால் படுகொலை நடக்கும் போது "கடிதம்" எழுதுகிறார்.
நேற்று வட கொரியா தன் சொந்த நாட்டில் , சொந்த பாதுகாப்புக்காக‌ அணு ஆயுத பரிசோதனை செய்த போது, முதல் ஆளாய்கண்டணம் தெரிவிக்கும் இந்தியாவுக்கு அடுத்தவன் நாட்டில் தலையிடுவது "இறையான்மை" மீறிய செயல் என ஏன் தெரியவில்லை?.
இந்தியா இரட்டை வேடத்துடன்,இரட்டை நாக்கையும் வைத்துக்கொண்டு பேசுவது அநியாயம், அக்கிரமம்.