Showing posts with label அண்டைநாடு. Show all posts
Showing posts with label அண்டைநாடு. Show all posts

யானையை வீழ்த்திய பூனை!

Category : , ,

ம்ஆப்கானிஸ்தான் நாட்டில் அது தான் நடந்துள்ளது.  மறுபடியும் தலீபன்கள் ஆயுதத்தால் 

மக்கள் ஆட்சியை வீழ்த்தியுள்ளனர்.




3லட்சம் அரசு இராணுவத்தை 75,000 தலீபன்கள் எப்படி வீழ்த்தினர் அதுவும் எந்த எதிர்ப்பும் இன்றி
தலைநகர் காபுல் வீழ்ந்தவுடன் மக்கள் ஓடிய அவலத்தை பார்த்த கண்கள் அழுவதை தடுக்க இயலவில்லை.ஜனநாயகம் வீழ்ந்தால் கூட பரவாயில்லைஅதை காக்க மக்களும் தயாரில்லை என்பதும் உண்மை.



இந்த ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கும் தலைவலிதான்தீவிரவாதம் மறுபடியும் 

வேறுவிதமாக தலைதூக்கும்.
ஆக மக்கள் விரும்பினால் தான் மக்களாட்சிஇல்லையெனில் அடிமை வாழ்க்கை தான்.
ஆப்கன் பெண்கள் நிலைதான் இனி கேள்விக்குறி?


ஆப்கன் எதிர்காலமே கேள்விக்குறிதான்??
மக்கள் கிளர்ச்சி இன்றிஇனி மாற்றம் இல்லைஜனநாயகப் போராட்டம் இனி மக்கள்
விரும்பினால் தான்இல்லையெனில் அடிமை வாழ்க்கை தான்.??? 


Photo credits: Google

வாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் தினசரி சர்க்கஸ்?

Category :

தினசரி இந்திய‍, பாகிஸ்தான் எல்லையான "வாகா"(WAGAH) வில் நடக்கும் கொடி ஏற்றம், இறக்கம் ஒரு பெரிய திருவிழாவாக, வேடிக்கைத் தெரு விழாவாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருவது பெரும்பாலானோர் அறிந்ததே.

இந்த "கண்றாவியை, கேலிக்கூத்தை" வெளிநாட்டினரும், இந்திய‌ பாகிஸ்தான் அப்பாவி மக்களும் பார்த்து ஆரவாரம் செய்வர். நாட்டுப்பற்றை, வெறியாக்கும் ஒரு மறைமுக நிகழ்வு அது. இந்நிகழ்வை நேரடியாகவோ, யு‍-டுயுப்(U-TUBE) மூலமாகவோ கண்டால் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா சார்பாக "எல்லைப் பாதுகாப்புப் படை"யும்(BSF) பாகிஸ்தான் சார்பாக‌ "ரேஞ்சர்ஸ்" (Rangers) என்ற படைப் பிரிவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர். படைவீரர்கள் ஓடுவார்கள், நிற்பார்கள்..... மரியாதை செய்வார்கள். வெகு வேகமாக காலைத் தூக்கி தாய் மண்ணை உதைப்பார்கள் (பாரத மாதா, இந்த‌ உதையில் உடைந்து உருக்குலைந்து போயிருப்பாள்).

இந்த மாதிரி உதை மரியாதைகளினால் "கால் மூட்டுகள்" சீக்கிரம் பயனற்றுப் போகும்; வலியினால் அவதிப்படுவார்கள். அறிவுள்ளவர்கள் இந்த மாதிரி செயல்கள் செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால் அதிகார‌ வர்க்கம் இந்த வீரர்களின் கால்களைப் பற்றியோ அல்லது உடல் நலனில் அக்கறை கொள்வதோ கிடையாது.

ஆனால் தற்போது இரு நாட்டு வீரர்களும், தம் முன்னோர்கள் படும் அவதியைக் கண்டு உதையின் வீச்சை குறைக்க கேட்டுக்கொண்டுள்ளனராம். இதனால் இரு அரசாங்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனராம்.

இந்த உதை நிகழ்வை ஒரேயடியாக நீக்கினாலும் நல்லதுதான். ஏன் ஒரு "கைக் குலுக்களுடன்" இனிய தினத்தை புதிதாக‌ வரவேற்கக் கூடாது?.

நன்றி:கீற்று.காம் (கீற்று இணையம்) Photo Courtesy:npr.org

துபாய்-வீரச் சீன தொழிலாளர்கள்!

Category :

அரபு நாடுகளில் நிறைய தனியார் நிறுவனங்கள் சரியான
முறையில் சம்பளம் தருவதில்லை என கேள்வி பட்டுருப்பீர்கள்;
இந்தியர்கள்,நேபாளிகள் மற்றும் பாகிஸ்தானியர் போராடுவார்கள்,
ஆனால் தூதரக ஆதரவு இன்மையால் தோல்வி அடைவார்கள்.
அல்லது நாட்டை விட்டு துரத்தப்படுவார்கள்.,

ஒரு முறை நேபாளிகள் வேலைநிறுத்தம் செய்து வெற்றியும் பெற்றார்கள்.,

பாருங்கள் சீனரின் துணிவை.,
முழுச்செய்தி-க்கு கீழே.,,