Showing posts with label திரை. Show all posts
Showing posts with label திரை. Show all posts

பவானிக்கு பசிக்குதாம்?

Category :

மிழ்த்திரைப்பட  உலகின் அற்புதமான‌
படமான "உதிரிப்பூக்கள்" திரைப்படத்தில்
வரும் சாதாரண வசனம்....வார்த்தை.
ஆனால் திரையில் பார்க்கும் போது, நம்
கண்ணீர் கூட திரையை பார்ப்பதை தவிர்க்க முடியாது.

"எந்திரன்" வீடியோ விளையாட்டை பாதி பார்த்துவிட்டு,மீதி நேரத்தில் "உதிரிப்பூக்கள்" பார்த்தேன்.பல ஆண்டுகளுக்கு பிறகு
பார்க்க நேர்ந்தது.அம்மா என்ற அற்புதமான உருவம்
மறைந்தால், குழந்தைகள் படும் துயரை மிகச் சரியாக‌
இயக்குனர் மகேந்திரன் காண்பித்திருப்பார்.ஒரு கொடுமையான‌
மனிதனாக வலம் வரும் "விஜயனின்" நடிப்பு அற்புதமானது.

திரைநாயகி "அசுவினி" இயல்பாக நடித்திருப்பார், நோயாளியாகவும்
வாழ்ந்திருப்பார்.

அனைவரும் மறுபடியும் பார்க்க வேண்டிய படம்.குறிப்பாக "இளைய‌

தலைமுறையினர்" பார்க்க வேண்டிய அற்புதமான படம்.

படம் வெளியான ஆண்டு:1979
நடிகர்கள்: விஜயன்,அசுவினி,சரத்பாபு
இயக்கம்:மகேந்திரன்
இசை:இளையராஜா
ஒளிப்பதிவு:அசோக்குமார்





சன் டி.வி‍‍‍‍‍-ன் நகல் டி.வி?

Category :

ஆமாம்! போன வாரத்திலிருந்து ஒளிபரப்பாகும்
கலைஞர் தொலைக்காட்சி,தமிழகத்தை கலக்கும் என எதிர்பார்த்தால்
அது சன்‍‍-ன் ஜெராக்ஸ் காப்பியாக பிற‌ந்துள்ளது.

அப்பட்டமான சினிமா மூலதனங்கள், அசிங்கமான
சீரியல்கள் (பெயர் நெடுந்தொடர்....தமிழாக்கி இருக்கிறார்கள்).
மற்றபடி இது ஒரு முழுமையான மற்றுமொரு மசாலா டிவி.
தமிழனுக்கு சோறு கிடைக்கிறதோ இல்லையோ,, வித,விதமான‌
வெட்டி சேனல்களுக்கு குறை இல்லாமல் கிடைக்கிறது.

தமிழகம் இந்த சேனல் புற்றுநோயிடமிருந்து மீள வழியே இல்லை
என்றே தோன்றுகிறது.

திருவாளர் திருமிதி...கேலிக் கூத்து!

Category :

அபத்தங்கள்,அசிங்கங்கள் அரங்கேறும் ஒரு இடம்.
சன் டி.வி‍ யில் "சனி" யில் நடைபெறும் ஒரு
நிகழ்ச்சி.

கணவன்,மனைவி ஜோடியாக பங்கு பெறும் ஒரு
பரிசுப் போட்டி நிகழ்ச்சி.ஆனால் இங்கு சமீப காலமாக‌
அசிங்கங்களே அரங்கேறுகின்றன.

ஆண்கள் "நைட்டி"யை போட்டுக் கொண்டும்,பெண்கள்
"மீசை"யை மாட்டிக் கொண்டும் பால் மாறி ஆடிக்
காட்டுகின்றனர்.இது தான் பெண்கள் முன்னேறி விட்டதாய்
காண்பிக்கும் அங்க அடையாளமோ தெரியவில்லை.?

இதில் வருபவர்களுக்கு இருக்கும் ஒரே குறிக்கோள்...தங்கள்
முகம் திரையில் வர வேண்டும் என்பது தான்.

இந்த கண்றாவியை நான் விரும்பி பார்ப்பது இல்லை...வெம்பி
பார்க்கிறேன்.என் வீட்டினரும் மாங்கு,மாங்கு என பார்ப்பதால்.
என் வீட்டினரை கூட வேறு நல்ல காட்சிக்கு மாற்றும் முயற்சியும்
தோல்வியிலேயே முடிகிறது.அபத்தத்தை ஆண்டு முழுதும்
எப்படி பார்க்கிறார்களோ என தெரியவில்லை.?

ஒன்று மட்டும் நிச்சயம்...சமுதாய அக்கறை அற்ற,
தமிழ் விரோத,"காசை"யே கொள்கை என தொழில் புரியும்
"நம்பர் ஒன் சேனல்"....சன் தொலைக்காட்சி மட்டுமே.
இல்லை இல்லை...சன் டி.வி....

அருள் பெறுவோம்,அம்மன் படம் பார்த்து!

Category :

ஆடி மாதம் பொறந்தாலும்,பொறந்தது இந்த விளம்பர‌
அசிங்கங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
ஆடி மாசத்துல தான் தூள் பறக்கும் இலவசங்கள் பிறக்கும்.ஒன்னு வாங்கனா,இன்னொன்னு இலவசம்;மொட்டை
போட்டா சந்தனம் இலவசம்;அல்வா வாங்கனா ரெண்டு(!) இலவசம்..
இப்படி பலப்பல...

நேற்று(18-07-2007) "ராஜ் டிவி"‍யிலும் ஒரு விளம்பரம்.
''இந்த மாதம் முழுவதும் அம்மன் படங்கள்...
அனைத்து படங்களையும் பார்த்து அம்மன் அருள் பெறுங்கள்''.
என்ன ஏமாற்ற வரிகள் பாருங்கள்?.சாமியை வைத்து வியாபாரம்
செய்வதும் கூட வரையறை இன்றி போய்விட்டது.ஒரு திரைப்படத்தை
பார்த்தால் பார்ப்பவருக்கு அருள் கிடைக்காது,டி.வி நிறுவனத்துக்குத்தான் 'பண' அருள் கிடைக்கும்.

தமிழன் சுய உணர்வை ,அறிவை தொலைத்து ,அருளை மட்டுமே தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தோன்றுகிறது.

விஜயகாந்த்‍ தமிழுக்கு ''நோ''?

Category :

தன்னுடைய 150‍ வது பட பூஜையை,சொந்த‌ இஞ்சினீயரிங் கல்லூரியில் நேற்று நடத்தி இருக்கிறார் கேப்டன்.எந்த ராணுவத்தில் பணிபுரிந்தார்
எனத் தெரியவில்லை(!). படத்தின் பெயர் வித்தகன்.

நான் கடலூரிலிருந்து,சென்னை செல்லும் போதெல்லாம் பார்ப்பேன்,மாமண்டூரில் தன் கல்லூரி வாயிலில் நின்று வரவேற்பார்.(விளம்பர பலகையில் தான்)

தமிழக கல்வி முன்னேறியதோ இல்லையோ,இந்த மாதிரி பகுதி அரசியல்வாதிகள் வாழ்வு முன்னேறி உள்ளது.அங்கு படிக்கும்
மாணவர்களைத் தான் கேட்க வேண்டும்,நோட்டு புத்தகங்கள்,பாடங்களில் கேப்டன் முகம் இருக்கிறதா என‌?.

சரி,விசயத்துக்கு வருவோம்.நேற்று செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது ஒரு கேள்வி அதிரும்படியாக இருந்ததாம்.

''சிவாஜி" படம் பார்த்தீங்களா?‍‍
அதற்கு தே.மு.தி.க கேப்டன், ''நான் எந்த படமும் பார்ப்பதில்லை.
நல்ல‌ ஆங்கில படங்களை மட்டும் பார்ப்பேன்.''

ஆகா நல்ல வேளை, அவர் நடித்த படத்தை அவரே பார்க்கவில்லை..பார்த்திருந்தால் என்ன ஆயிருக்கும்?.

பாருங்கள் தமிழர்களே...எவ்வளவு திறமையாக ஏமாற்றி பிழைக்கிறார்கள்.இவர்கள் ஆங்கில படம்தான் பார்ப்பார்களாம்.
நாம் தான் இவ‌ர்க‌ள் ந‌டித்த‌ ப‌ட‌த்தை பார்த்து,பார்த்து ஏமாற‌ வேண்டுமாம்.

ஏமாறுவ‌து தான் ந‌ம‌க்கு அல்வா சாப்பிடுவ‌து மாதிரி ஆயிற்றே...வாங்க ''ப‌ழ‌க‌, ப‌ழக'' ஏமாறுவோம்.

சிவாஜி‍யை புடிக்க வந்த நிமிட்ஸ் கப்பல்?

Category :

என்ன ஆச்சரியமா இருக்கா....எனக்கும் அதே'''ங்''...
நம்ம சிவாஜி‍‍-ய தான் புடிக்க (படம் புடிக்க இல்ல) வந்துருக்காங்களாம்..

அத‌னால‌ தான் நிமிட்ஸ்-ஐ சென்னை க‌ட‌லில் நிறுத்திவிட்டு எல்லா போர்வீர‌ர்க‌ளும் சுத்தி பார்க்க‌ போயிருக்காங்க‌.அதுல‌ ஒரு கூட்ட‌ம் CIA ஐ சேர்ந்த‌தாம்.க‌ட‌ற்ப‌டை போர்வீர‌ர்க‌ள் நட்சத்திர‌ ஓட்ட‌ல்க‌ளில் வீர‌த்தை காட்டிக்கொண்டிருக்கும் போது,இந்த‌ CIA குழு ஒவ்வொரு தியேட்ட‌ருக்கும் போய் சிவாஜிய‌ தேடுதாம்.அவ‌ங்க‌ வேட்டிய‌ க‌ட்டிகிட்டு, ஆட்டோவுல‌ தான் போறாங்க‌ளாம்.

நேத்து ஒரு திரைய‌ர‌ங்கு(தியேட்ட‌ர்) சென்ற‌ போது,தியேட்ட‌ர்கார‌ங்க‌ இழுத்து‍கிட்டு போய் உள்ள‌ உக்கார‌ வ‌ச்சுட்டாங்க‌ளாம். தியேட்ட‌ருல அவ்ளோ கூட்ட‌மாம்(????) ஏசி-ய‌ கூட‌ நிறுத்திட்டாங்க‌னா பார்த்துக்கோங்க‌...
லைட்கூட‌ போட‌ல‌யாம்.

CIA அதிகாரிங்க‌ நைசா...ப‌க்க‌த்துல‌ இருந்த‌வ‌ங்க‌கிட்ட‌ பேச்சு கொடுத்தாங்க‌ளாம்.அட‌ த‌மிங்கிலிஷ்‍‍-ல‌ தான்.ஆனா ப‌க்க‌த்துல‌ இருந்த‌வ‌ரு அமெரிக்க‌ ஆங்கில‌ம் பேசிய‌போது திடுக்கிட்டாராம்.விசாரிச்சா அவ‌ரும் நிமிட்ஸ்-லேர்ந்து தான் வ‌ந்திருக்காரு,ப‌க்க‌த்துல‌ ஒரு பெண்புறா வுட‌ன்.
ச‌ரி எப்ப‌டா இடைவேளை வ‌ரும்னு காத்திருந்தாங்க‌ளாம்.....யாராவ‌து சிவாஜி ர‌சிக‌ன் மாட்ட‌மாட்டானா-ன்னு‌...இடைவேளை வுட்டும் லைட்டை போட‌ல‌யாம்.CIA அதிகாரி ஒருத்த‌ர் சிக‌ரெட்டு லைட்ட‌ர‌ கொளுத்துனா....அதிர்ச்சி....????இருந்தது ஒரு இருவ‌து பேர்.

ப‌ட‌ம் வுட்டு யாரா‌வ‌து வெளிய‌ வ‌ரும்போது,சிவாஜி ப‌த்தி கேட்க‌லாம் வ‌ழியிலே காத்திருந்தா யாருமே வெளியே போவ‌லையாம்.ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டு அடுத்த ஷோவும் பாக்கபொறீங்களா‍ன்னு கேட்டாங்களாம் CIA. அதைக் கேட்டு,சார் நாங்களே நொந்து நூலாக இருக்கோம்,,,,போங்க சார்‍ன்னு தமிங்கிலத்துல சொன்னாங்களாம்.நாங்க எல்லாம் ஆஸ்ரமத்துல வேலை செய்யரோம்...இப்ப எங்க வேலை நாளு பூரா இங்க தூங்கறது தான்.என்ன‌ பன்றது சார்...தலை யெழுத்துன்னு வேலை செய்யறோம்.அதுல நல்ல ஆங்கிலம் பேசிய ஆஸ்ரம வேலைகாரர்....ஏன் சார்...எங்க சிவாஜிய பாக்கவா அமெரிக்காலேர்ந்து வந்தீங்க??...

நீங்க வேற....200 கோடிய அமெரிக்காலேர்ந்து சிவாஜி எடுத்துகினு வந்தாருல்ல...அந்த பணம் எங்க பணம்...அதை கண்டுபுடிக்கத்தான் வ‌ந்துருக்கோம்.அந்த பணத்த அவர் உழைச்சி சம்பாதிக்கல...அமெரிக்க‌ ஹவாலாவுல ''தில்லுமுல்லு''-‍ல சம்பாதித்தது......

இதைக் கேட்ட ஆஸ்ரம ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.ஒரு ரசிகர் மட்டும்.....CIA கிட்ட சொன்னார்,

''நாங்க‌ ஒரு த‌ட‌வ‌ ஏமாந்தா....
நூறு த‌ட‌வ‌ ஏமாறாம‌ வுட‌ மாட்டோம்''.

இப்ப‌ CIA அதிகாரிக‌ள் உறைந்த‌ன‌ர்.

அதிருதில்ல‌......