Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

பூக்கிறது புதிய நாடு-தென் சூடான்

Category :

உலகின் புதிய நாட்டை உருவாக்கி சாதனை படைத்த சூடானிய மக்கள் மிகுந்த
மகிழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.


கடந்த 09-01-2011 முதல் 15-01-2011வரை நடந்த வாக்குப்பதிவில் 98%பேர் தனிநாட்டுக்கான வாக்கை செலுத்திருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென் சூடானுக்கு ஒரு கண்ணீர்க் கதை உண்டு.எப்படி ஈழத்தமிழன்
பிரிட்டிசு காலனி ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டானோ அவ்வாறு. ஆப்ரிக்காவின் பெரிய நாடு சூடான்.வடக்கில் முசுலிம் மதத்தினர் பெரும்பான்மையாகவும்
தெற்கில் கிருத்துவ மதத்தினரும் வாழ்கின்றனர்.


ஆங்கிலேயர் தன் வசதிக்காக தெற்கு, வடக்கு சூடானை இணைத்து ஆட்சி
புரிந்து விட்டு,போகும்போது வடக்கு சூடானிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து
விட்டு வெளியேறினர்.அப்போதே தென் சூடானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும்
ஆளுமை இன்மையால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.ஏனெனில் இரு சூடானுக்கும் மொழி,பண்பாடு மற்றும் கலாச்சாரம் வேறுபட்டது.

அதன்பின் நடந்தது முப்பது வருட உள்நாட்டு யுத்தம்....லட்சக்கணக்கான மக்கள் பலிகடா ஆயினர்.

இங்கிலாந்து நாட்டின் காலனியாதிக்கத்தில் சூடான் இருந்தது சுமார் 57 ஆண்டுகள்.400 மொழிகளுக்கு மேல் பேசப்பட்டு வந்தாலும் பெரும்பான்மையானோர் பேசுவது அரபி மற்றும் ஆங்கிலம் மட்டுமே.சூடான் விடுதலை பெற்றது 01- சனவரி 1956.

கடைசியாக 2002 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான பேச்சுவார்தையின் முடிவாக
மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த உடன்பாடு ஏற்பட்டது.ஐ.நா வின் சிறப்பு குழுவினரால் இந்த வாக்கெடுப்பு சனவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது கடைசி வெற்றி அறிவிப்புக்காக காத்திருகின்றனர்.

தென் சூடானின் சுதந்திர அறிவிப்பு வெளியிடும் நாள் 14-பிப்ரவரி- 2011. அன்று
உலகின் புதிய நாடாக உலா வரப்போகிறது தென் சூடான்.

வாழ்த்துகள் தென் சூடான்.

நன்றி:கீற்று.காம்,எழுத்து:எண்ணத்துப்பூச்சி
படம் உதவி:AFP

நானும் சாமி தான்?

Category :



வேசம் போட்டு
வேடிக்கை காட்டினேன்,
வயிற்றை நிரப்ப...
வீதி,வீதியாய் விதியே
என்று திரிந்தாலும்....
ஐம்மது பைசா,அதிகமாய்
போனால் ஒரு ரூபாய்,இலவசமாய்
ஏளனப்பார்வையும்,பேச்சும்.

என்னை மாதிரியே ஒரு
சிலை தெருவோரம்..,
அங்கே வ‌ருப‌வ‌ர்க‌ள்
வேடுக்கை காட்டுவார்க‌ள்...?
அங்கேயும் ஒரு உண்டி உண்டு,
அத‌ன் வாய் நிர‌ம்பி,
அரைகுறையாய் சிரித்த‌து,
ஒரு "ப‌த்து ரூபா" நோட்டு.

கற்பழிப்பு=பாலியல் வல்லுறவு?

Category :


ஈழத்தின் பாலியல் வல்லுறவும்,தமிழகத்தின் கற்பழிப்பும்!

கடந்த சில தினங்களுக்கு முன், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,நம்முடைய புலம் பெயர் சகோதரிகளின் பேச்சு ஆச்சரியமாக இருந்தது.


அவர்களின் "பாலியல் வல்லுறவு" பேச்சு கூட தெளிவாகவும்,ஆண்மைத்தனமாகவும் இருந்தது.இலங்கையில் நடைபெறும் இன அழிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்ற போதிலும் அவர்களின் அவலங்கள் இன்றும் வேடிக்கை தான் பார்க்கப்படுகின்றன,இந்த குருட்டு உலகத்தினால்.


இந்த அவலம்தான் " விடுதலைப் போராட்டத்தில்" அவர்களை போர்முனைக்கு இட்டுச் சென்றுள்ளது எனக் கூறலாம்.ஈழப் பெண்களின் வீரத் தியாகங்களும்,பங்களிப்பும் கண்டிப்பாய் வரலாற்றில் இடம்பெறும்.
புலம்பெயர் சகோதரிகளின் வார்த்தைகள் மிக்க நம்பிக்கை அளித்தன.அதுமாதிரி தமிழகப் பெண்களும் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.


இன்னும் கூட தமிழகத்தின் தினசரிகள் " கற்பழிப்பு" என்ற அசிங்கமான அர்த்தமற்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றன. எப்போது மாறுவோம் நாம்?

ஆஞ்ஜநேயர் பாழாக்கும் பால்..?

Category :

அதிர்ச்சி அடைய வேண்டாம் மக்களே...உண்மை.

ஒவ்வொரு மாதமும் புதுவை அருகில் உள்ள "பஞ்சவடி"ஆஞ்ஜநேயருக்கு 1000லிட்டர் பால் ஊற்றி அபிசேகம் என்ற பெயரில் அத்தியாவசிய பொருளை பாழக்குகின்றனர் இதன் நிர்வாகிக‌ள்.

இவர்களை பக்தர்கள் என்பதை விட அயோக்கியர்கள் என்றுதான் கூற வேண்டும்.ஊரில் எத்தனையோ குழந்தைகள் பாலுக்கு பரிதாபத்தில் தவிக்கும் போது....இவர்களின் செயலை வேறு எப்படி கூறுவது.
ஒரு லிட்டர் பால் 12ரூபாய்....ஆக ரூ.12,000/= பாலை அத்தியாவசிய பொருளை வீணாக்குவது குற்றம் தானே...

ரசிகர்கள் தான் தங்கள் கட்‍ அவுட் கதாநாயகனுக்கு பால்ஊற்றி அசிங்கம் செய்வதை பார்த்திறுக்கிறோம்.ஆனால் இந்த செயலை என்னவென்று சொல்வது....

ஒருசில தினசரிகள் இந்த பால் படத்தையும் பத்திரிகையில் போட்டு பக்தர்களை பாழாக்கி கொண்டுள்ளன.
கடைசி வெறி:
இதில் என்ன கூத்து என்றால், இந்த அபிசேகம் உலக‌ நன்மைக்காக நடத்தப் படுகிறதாம்.
Thanks: Dinamalar Photo

தேவலோகத்தில் சிம்புதேவன்!

Category :

ஆமாங்க....நம்ம இயக்குநர் சிம்புதேவனை தேவலோக
கடவுள்கள் அழைத்து பாராட்டு விழா நடத்தினார்களாம்.
ஒவர் பாராட்டு மழையில் குடையே புடிக்க வேண்டியதாப்
போச்சாம்.அவர்கள் எடுக்கும் படத்துக்கு "கால்சீட்'' கேட்டு நச்
அரிப்பு வேறாம்.

இதுல ஒரு தமாசு பாருங்க, எமலோகத்து கடவுள்கள் நம்ம
சிம்பு தேவனுக்கு ''டின்னு'' கட்டிட்டாங்களாம்.ஏன் திருட்டு 'விசிடி' ய எங்களுக்கு அனுப்பலன்னு....கடவுள்களின் தொல்ல தாங்காம ஒடினவர், திடுக்கிட்டு (?) அங்க இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.அவ்ளோதான் சர,சரன்னு பறந்தவர்....கூவத்துல வந்து தொப்புன்னு....நல்ல வேலை சிம்புதேவனுக்கு ஒன்னும் ஆகலை,விழுந்தது குளிச்சிட்டிருந்த ரெண்டு
பன்றி-யின் மேல என்பதால் அந்த பன்னிகள் எமலோகம் போவ வேண்டியதாப் போச்சு.

இப்ப நம்ம உலகத்துக்கு வருவோம்...."அறை எண் 305-ல் கடவுள்" என்ற நகைச்சுவை படத்துக்கு சிம்பு தேவனுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.இரண்டரை மணி நேரம் நம்மை சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்த பிரகாஷ்ராஜ்,சந்தானம்,என அனைத்து நடிகர்களுமே அசத்தியிருக்கின்றனர்.

படத்தின் சின்ன செய்தி:
''உழைத்தால் உயரலாம்"

முக்கிய செய்தி:
IT மக்களா....படம் பாக்கப் போகும் போது கைய பாக்கட்டுல வச்சுகோங்க(உங்க பாக்கட்டுல மட்டும்)....நெறய பேருக்கு விரல் காணாம போயிடிச்சாம்.

சிம்புதேவன் திடுக்கிட்டு விழக் காரணம்:
தேவலோகத்துலயும் நம்ம மலயாளிகள் ''சாயாக் கடை''யும்''சாராயக்கடை''யும் வைத்திருந்ததைப் பார்த்து.?

ஹேப்பி பொங்கல்!

Category :

ஒரு வழியாக தை பிறந்து,பொங்கல் விழாக்களும்
கழிந்து விட்டன.
தை முதல் நாள் அன்று காலையிலேயே கடலூரை வலம் வந்தேன்.நிறைய கோலங்களை காண முடிந்தது...அழகழகாய்...."Happy Pongal"என்ற வாழ்த்துகளுடன்.தமிழனின் திருநாளைக் கூட ஆங்கில வாசனையுடன் கொண்டடுவது வேதனையாக இருந்தது.நம் பெயருக்குமுன்னால் தொங்கிக்கொண்டு இருக்கும் ஆங்கில தலை எழுத்தைப் போல.

முன்பு போல் பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் சுத்தமாக குறைந்து போய்விட்டது.தபால் துறையினருக்கு பெரும் வருமானம் குறைந்திருக்கும்.ஏனென்றால் அனைவரும் குறுஞ்செய்தி (SMS) மூலம் வாழ்த்தை முடித்துக் கொண்டுவிட்டனர்.

மாட்டுப் பொங்கல் அன்று கடலூர் பகுதியில் நிறைய இடங்களில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இரு தின‌ங்க‌ள் க‌ழித்து "ஆற்றுதிருவிழா"வும் இனிமையாக‌ நடந்தேறின‌‌.பெண்ணையாற்றின் க‌ரையில் வெளியூர், உள்ளூர் சாமிக‌ளின் தீர்த்த‌வாரி‍யும் ந‌டைபெற்ற‌ன‌.

க‌டைசி வெறி:

இப்போதெல்லாம் புதிய‌ தமிழ் திரைப‌ட‌ங்க‌ளின் இடைவேளை ஆங்கில‌த்தில் தான் INTERMISSION செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌.த‌மிழ‌ர்க‌ளூக்கு இடைவேளை புடிக்காதோ என‌த் தெரிய‌வில்லை?.

ஆங்கில புத்தாண்டும்,நம் ஆடம்பர அலங்கோலமும்?

Category :

இன்று "நியு இயர்".NEW YEAR ஆரம்பம்!!...

ஆமாம்...ஜனவரி ஒன்று என்பது உலகெங்கும் கொண்டாடப்படும் தினம் தான்.ஆனால் தமிழன் ,ஆங்கில ஒன்னைக் கூட‌அசிங்கமாய் கொண்டாடக் கற்றுக் கொண்டு விட்டான்.

நேற்று இரவே 12 மணிக்கு வெடிச்சத்தத்துடன் நம்ம மாரியாத்தா கோயிலில் கூட புத்தாண்டை ஆரம்பித்தனர்.விடிந்தவுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று ஆண்டவனுக்கும் ஹேப்பி நியு இயர் சொல்லி மகிழ்ந்தனர்.
இந்தமாதிரியான கேளிக்கை கூத்துகள் சில வருடங்களாகத்தான் வேர் விட்டுக் கொண்டுள்ளன.

எங்கள் பக்கத்து தண்ணீர் தேசத்தில்(புதுச்சேரி தான்!!!) இரவு முழுதும் நட்சத்திர ஹோட்டல்களில்(விடுதி)....ஆட்டமும்,பாட்டுமுமாக‌ அரங்கேறி உள்ளன.
த‌மிழனின் அடையாளங்கள்,ஆட்டம் கொண்டு இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.

தமிழினமும் விளம்பர யுகத்தில் மாட்டிக்கொண்டு விடியலைத்தொலைத்து கொண்டிருக்கிறதோ என ஐயமாக உள்ளது
.

மூட்டைப்பூச்சிக்கு பயந்து...?!

Category :

வீட்டைக் கொளுத்த‌லாமா?...

செல்ல(லா) ப‌திவ‌ர்க‌ளே என்ன‌
ஆயிற்று உங்க‌ளுக்கு....சில‌ வார‌ங்க‌ளாக‌ த‌மிழ்ம‌ண‌ம் அழுகிய‌
ம‌ண‌த்துட‌ன் வாழ்ந்து கொண்டிருப்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும்.

நிறைய‌ பேர் வேடிக்கை பார்த்தோம்,ஒப்புக்கொள்கிறோம்.,
ப‌திவைத்தாண்டி ஒரு வார்த்தைப் போர் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌தினால்
நிறைய‌ பேர் அமைதி காத்திருக்க‌க் கூடும்.நிறைய‌ பேர் காய‌ப்
ப‌டாத‌தினாலும் அமைதியாய் இருந்திருக்க‌க் கூடும்.

இப்போது என்ன ''குடி'' முழுகிப் போய்விட்ட‌து...விடைதான்
பெற்றாகிவிட்ட‌தே...பின் ஏன் விடை பெற‌வேண்டும் ப‌திவுல‌கிலிருந்து?.
வாருங்க‌ள் ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ளே ப‌திவைப் போடுங்க‌ள்...படிப்ப‌வ‌ர்
ப‌டிக்க‌ட்டும்....படிக்காத‌வ‌ர் பார்க்க‌ட்டும்...?

ந‌ம் ஊரிலே ,ப‌க்க‌த்திலேயே ''முள்ள‌மாரி,முடிச்ச‌விக்கி,அயோக்கிய‌ன்,
விப‌ச்சார‌ன்,விப‌ச்சாரி,மென்பொருள் திருட‌ன்,பெண்பொருள் திருட‌ன்,
அர‌சிய‌ல் திருட‌ன் போன்றோருட‌ன் வாழ‌வில்லையா நாம்.இன்னும்
சில‌ கொடிய‌ வில‌ங்குக‌ள் கூட‌ வாழ‌ப் ப‌ழ‌கிக் கொண்டுள்ளோம்.
அதுமாதிரி இந்த‌ இணைய‌த்திலும் சில ''ம‌ன‌ நோயாளிகள்'' இருக்கின்ற‌ன‌ர்.
எங்கேயாவ‌து த‌ன் உள‌ர‌லை அவ‌ர்கள் கொட்டி விட்டுப் போக‌ட்டுமே.....

ப‌டித்த‌வ‌ன் என‌க் கூறிக்கொள்வப‌வ‌ன் எத்த‌னை பேர் ப‌ண்புட‌ன்
ந‌ட‌ந்து கொள்கிறான்...இதில் பெண்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌...
நாம் அன்றாடம் பார்க்காத‌,கேட்காத‌ அசிங்க‌ங்க‌ளா....இந்த‌ வ‌லைப் பூக்க‌ளில்
புதிதாக‌ பார்க்கிறோம்..பின் ஏன் இங்கே ம‌ட்டும் கூச்ச‌ல்?...,

சென்னை ப‌திவ‌ர் ப‌ட்ட‌றை‍-2007 க்கு சென்றுவ‌ந்த‌ பின் தான் புரிந்த‌து....
நிறைய‌ த‌மிழ்ம‌ண‌ ப‌திவ‌ர்க‌ள் குழுவாக‌ செய‌ல்ப‌ட்ட‌து...அத‌னால் ''அல்ல‌ல்''
ப‌டுவ‌து.நிறைய‌ ப‌திவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தொலைபேசி,மின்னஞ்ச‌ல்,சாட்,
போன்ற‌ ''முத‌லைக்குள்'' மாட்டிக் கொண்டு இருந்த‌தை.இதுதான் அடுத்தவ‌னை காட்டிக் கொடுக்க‌ ஏதுவாக‌ இருந்திருக்கும்.

இந்த‌ ''குழு ச‌க்தி'' தான்....எல்லா பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் கார‌ண‌ம் என‌ நினைக்கிறேன்.க‌ருத்து திணிப்புக்கும்,அடாவ‌டிக்கும் இதுதான் ''தீ''யாக‌
இருந்திருக்கும்.மாற்றுக் க‌ருத்தை அசிங்க‌மாக‌ ஆராய‌ தூண்டிய‌து...அசிங்க‌த்தை கிள‌ர‌ தூண்டிய‌து இந்த‌ தேவைய‌ற்ற‌ உற‌வுக‌ள் தான் என‌ நினைக்கிறேன்.
இந்த‌ கூட்ட‌த்தின‌ர் ஒரு கால‌த்தில் ஒட்டி,உற‌வாடியும் வ‌ந்துள்ள‌ன‌ர்.

ஆக‌வே த‌மிழ் வ‌லைப்பூக்க‌ளின் உயிர்க‌ளே வாருங்க‌ள்., ப‌ழ‌தை ம‌ற‌ப்போம்.
''புதிய‌ ப‌யிரிடுவோம்....???

க‌டைசி வெறி:

இந்த‌ வ‌லைபூக்க‌ளினால் அடித்த‌ட்டு ம‌க்க‌ளுக்கு ஒரு ப‌ய‌ணும் இல்லை.ஆனால் ந‌ம் அனுப‌வ‌ங்க‌ள் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளுக்கு
பாடமாகவாவது ப‌ய‌ன்ப‌ட்டாலே
பெரிய‌ வெற்றி தான்.

த‌மிழில் ஒரு இர‌ண்டாயிர‌ம் வ‌லைபூக்க‌ளில் ,சில‌ நூறுதான் உயிரோடு
இருக்கும் என‌ நினைக்கிறேன்.இந்த‌ நூறில் ஒரு இருப‌து பேர் கும்மி அல்ல‌து
குழு ப‌திவ‌ர்க‌ள்,புதிதாக‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் முக‌ப்பை பார்த்த‌வுட‌ன் ஓட்ட‌ம்
பிடித்தோர் எத்த‌னை பேரோ???

ச‌கோத‌ர‌ ,ச‌கோத‌ரிக‌ளே த‌மிழுக்காவாவது, நாம் ந‌ம் ப‌ய‌ண‌த்தை
தொட‌ர‌லாமே...!!!

''வ‌லைப்பூக்க‌ள் வாழ‌ட்டும்
ந‌றும‌ண‌ம் இல்லையென்றாலும்,
வ‌ச‌ந்த‌ம் ஒரு நாள் வீசும்
அத‌ன் வாழ்க்கையை மாற்ற‌?"

மகாநடிகனும்,பெரியார் மோதிரமும்...?

Category :

நடிகர் சத்தியராஜ்-‍க்கு பெரியார் மோதிரத்தை திராவிடர் கழக
தலைவர் வீரமணி அளித்தாலும் அளித்தார்...அதுபற்றி புளகாங்கிதம் அடைகிறார்கள் சிலர்.உண்மையிலேயே பெரியார் கொள்கைகளுக்கு நேர் மாறானது...இந்த சங்கதிகள்...

பெரியார் அணிந்திருந்த மோதிரத்தை,அடுத்தவர் அணிவதால் என்ன‌ ப‌ய‌ன்? மேலும் இது ப‌குத்த‌றிவிற்கே சவாலான செயலும் கூட‌.சாய்பாபா ப‌ட‌ம் போட்ட‌ மோதிர‌ம் அணிவ‌து மாதிரி.....ஒரு ச‌முதாய‌ சீர்திருத்த‌ ந‌டிக‌னை,நாய‌க‌னை பாராட்ட‌,எத்த‌னையோ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌வே.அய்யா வீர‌ம‌ணி அவ‌ர்க‌ளே ஏன் இந்த‌ த‌டுமாற்ற‌ம்...


என்ன‌ ஆயிற்று...இன‌ முர‌சு ச‌த்திய‌ராஜ்-க்கு....பெரியாராக‌ ந‌டித்த‌த‌ற்காக‌ அளித்தார்க‌ளாம்.இவ‌ர் ஏற்றுக் கொண்டாராம்....அய்யா,இந்த‌மாதிரி மூடப் பழக்கங்களை,பைத்திய‌க்கார‌த் த‌ன‌த்தைத்தானே வாழ்நாள் முழுதும்
எதிர்த்தார் பெரியார்.

ச‌த்தியராஜ் அவ‌ர்க‌ளின் பேச்சினை ஒலிநாடா மூல‌ம் கேட்டு இருக்கிறேன்.மிக‌வும் அருமையான மற்றும் சிந்த‌னையை த‌ட்டி எழுப்பும் பேச்சுக‌ள் அவை.

அனைவ‌ருக்கும் புரியும்ப‌டியான‌,அதே நேர‌த்தில் சுருக்க‌மான‌ பேச்சு ம‌கா ந‌டிக‌னுடைய‌து.அவ‌ர் நிச்ச‌ய‌மாக‌ ப‌குத்த‌றிவை த‌மிழ் ம‌க்க‌ளுக்கு மீண்டும் ஊட்ட‌,பெரும் ப‌ங்கு வ‌கிக்க‌ முடியும்.செய்வாரா தெரிய‌வில்லை....?

கடைசி வெறி:


1.போன‌ வார‌ம் வேலூர்‍ ப‌க்க‌த்தில் ஒரு த‌ங்க‌ கோவில் (300 கோடியில்)க‌ட்டியுள்ளார் ஒரு சாமியார்.அவ‌ர் அந்த‌ த‌ங்க‌த்தை ரிச‌ர்வ் பேங்க் ஆப் இந்தியா(RBI) மூல‌மாக வாங்கினாராம்.அந்த‌ இட‌ம் நூறு ஏக்க‌ர் நில‌த்தில் அமைந்துள்ள‌தாம்.அந்த‌ கோயிலுக்கு கும்பாபிசேக‌ம் ந‌ட‌ந்த‌ போது,பொதும‌க்க‌ளுக்கு அனும‌தி இல்லையாம்.....எல்லாம் வெள்ளை கார‌ணுக்குதானாம்.

என்ன‌மோ ந‌ட‌க்கிறது மக்களே.,...உஷார்....உஷார்....

2.சென்னை கபாலீச்வ‌ர‌ர் கோயில் கோபுர‌த்தை இடி தாக்கிய‌தாம்....கோபுர‌ப‌ட‌த்தை வைத்து ஒரு "பால‌ஸ்தான‌ பூஜை" செய்தார்க‌ளாம்....எப்பா பூஜையை எப்ப வேணாலும் நடத்தலாம்...

மொத‌ல்ல‌ இடி தாங்கி வைங்க‌....மக்கள காப்பாத்துங்க...
(ப‌ட‌ம் சுட்ட‌து:மாலைச்சுட‌ர்)

சொந்த செலவில் சூனியம்?

Category :

அப்படித் தான் தெரிகிறது.தெரியாத்தனமா "சிவாஜி" திரைப்
படத்துக்கு என் நாலரை வயது மகன் மற்றும் நான்கு வயதுடைய‌
தங்கை மகனை அழைத்து போனது தவறான முடிவோ எனத்
தோன்றுகிறது.

ஊரும்,ஊடக உலகமும் "சிவாஜி,சிவாஜி.....வாஜி,வாஜி,பாவ்ஜி...என‌
கூச்சல் போட்டதால் ஒரு ஆசையில் போய்விட்டோம்.
இப்படம் தான் அந்த இரு சிறுவர்களுக்குமே முதல் திரைப்படம்.இருவ‌ரும்
தூங்காம‌ல் பார்த்துகொண்டிருந்த‌து ஆச்ச‌ரிய‌மாக‌வும் இருந்த‌து.
அடுத்த‌ நாள் முத‌ல் ஆர‌ம்ப‌மான‌து...."சிங்க‌ம் சிங்கிளாத்தான் வ‌ரும்".....

இப்போது தான் வினையே ஆர‌ம்ப‌மாகியுள்ள‌து.சிறுவ‌ர்க‌ளின் போக்கு
தாறு,மாறாக‌ உள்ள‌து.கால்க‌ள் தானாக‌ உய‌ருகின்றன‌...அவ்வ‌ப்போது
க‌ட்டிலிலிருந்து ப‌ற‌க்க‌,விழுகிறார்க‌ள்.

கூட‌வே தொலைக்காட்சியும்(இல்லை டி.வி) திரும்ப‌,திரும்ப‌ இந்த‌
ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ளையும்,காட்சியையும் காட்டி தொந்த‌ர‌வு செய்த‌தால்
அவ‌ர்க‌ளின் பார்வை ர‌ஜினியின் மேல் ப‌ட்டு விட்ட‌து.

இதையெல்லாவ‌ற்றையும் விட கொடுமையான‌து என்ன‌வென்றால்,உன் பெய‌ர் என்ன‌ என‌ யாராவ‌து என் மகனிடம் கேட்டால்''ர‌ஜினி" என‌ கூறுவ‌து தான்.ப‌ள்ளிக்கூட‌த்தில் போய் விசாரித்தோம்...அங்கு த‌ன் பெய‌ரை ஒழுங்காக‌ கூறுகிறானாம்.அங்கு அட‌க்க‌மாக‌ உள்ளானாம்.

வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் வேலையை ஆர‌ம்பித்துவிடுகிறான்.....குதிப்ப‌து,தாவுவ‌து
என‌ப் போன்ற‌ சேட்டைக‌ள்....நானும் விள‌க்குகிறேன்....மேலும் ரஜினி சன்டை போடமாட்டார்,அவருக்கு ''டூப்'' இருப்பார்கள் எனத் திரும்ப,திரும்ப கூறவேண்டியுள்ளது.சினிமாவில் குதிப்ப‌து...
சும்மா என்று....ப‌ஞ்சு மெத்தை‌யில் தான் அவ‌ர்க‌ள் குதிப்பார்க‌ள்...நாம் அது
மாதிரி குதித்தால் கால் உடைந்து விடும் என்று...

க‌ண் கூடாக‌ தெரிந்த‌து,குழ‌ந்தைக‌ள் எவ்வாறு ஊட‌க‌ சாத‌ன‌ங்க‌ளால்
மாற்ற‌ப்ப‌டுகிறார்க‌ள் என்ப‌தை....!

டிஜிடல் பேனரும்,அடங்காத சண்டையும்....

Category :

இப்போதெல்லாம் கடலூரை சுற்றி வளைத்திருப்பது...
பாழாய்ப்போன டிஜிடல் பேனர்கள் தான்...

நேற்று(18-08-2007) கூட பா.ம.க வும் ,விடுதலை சிறுத்தைகளும்
அடித்து கொண்டது அநாகரீகத்தின் உச்சகட்டம்.பாவம்
அப்பாவி தொண்டர்களின் வாழ்க்கையை அழிக்கும்
இந்த சண்டையை விட்டால் எத்தனையோ குடும்பங்கள்
மகிழ்ச்சி அடையும்.

அதுவும் பேனர் என்றால் 10x10 அல்ல....10 அடிக்கு 100அடி
அகலத்தில் கூட அமைக்கிறார்கள்.இதில் அவர்கள் பொதும‌க்க‌ளை
நினைத்துக் கூட‌ பார்ப்ப‌தில்லை.பேருந்து நிறுத்த‌ம் கூட‌ ம‌றைந்து
போகும் அள‌வுக்கு,ஒரு நோயாகிப் போயுள்ள‌து இந்த‌ மோக‌ம்.

க‌ல்யாண‌ம் முத‌ல் காதுகுத்த‌ல் வ‌ரை இந்த‌ வியாதி ப‌ட‌ர்ந்துள்ள‌து.
டிஜிட‌ல் பேன‌ர் இல்லாத‌ விழா,ஒரு விழாவாக‌வே இல்லை என்ற‌
நிலை ஏற்ப‌ட்டுவிட்ட‌து.

அர‌சிய‌ல் க‌ட்சி ச‌கோத‌ர‌ர்க‌ளே ம‌க்க‌ளை ப‌ற்றி கொஞ்ச‌ம்
நினைப்போம்.ஒன்றும் செய்யாவிட்டால் கூட‌.

உதாரணத்திற்கு,இரண்டு மாதங்களுக்கு முன் வடலூர் சென்ற போது வடலூரே காணாமல் போனது.சுமார் 200 டிஜிடல் பேனர்கள்
முக்கிய நான்கு முனை சாலையையே அடைத்திருந்தன.
வைக்கப்பட்டது தமிழக‌அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை வரவேற்க...அவர் வந்து மூன்று நாட்கள் கழிந்தும்
அப்படியே தான் டிஜிடல் பேனர்கள் வரவேற்றுக் கொண்டிருந்தன.

காவல்துறை தான் ஏதாவது செய்ய வேண்டும் .

பாலைவனப் ப‌ரிதாப‌ங்க‌ள்?‍

Category :

சில‌ தினங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த‌
இளைஞரை சந்திக்க நேர்ந்தது.அவர் துபாயிலிருந்து திரும்பி
இருந்தார்,(அரசின் கருணை மூலம்)-amnesty அம்னெஸ்டி மூலம்.

த‌ம்பியின் க‌தை கேட்டு ம‌ன‌தே க‌ன‌த்த‌து.என்ன‌ செய்வ‌து ஒரு ப‌க்க‌ம்
சாப்ட்வேர்(software) மூல‌ம் ந‌ம் இளைஞ‌ர்க‌ள் ப‌ண‌த்தில் மித‌ப்ப‌தும்
ஞாப‌கம் வ‌ந்த‌து.

த‌ம்பி ப‌த்தாவ‌து வ‌ரை ப‌டித்துள்ளார்...வெளிநாட்டு மோக‌த்தினால்
ம‌ட்டும் இல்லாம‌ல் த‌ன் குடும்ப‌ நிலையை மாற்ற‌வும் நினைத்து
ஒரு பெரும் தொகையை ஏஜென்டு‍க்கு கொடுத்துவிட்டு விமான‌ம்
ஏறியுள்ளார்.

இற‌ங்கிய‌ பின்பு தான் தெரிந்த‌து,அது ஒட்ட‌க‌ கூடார‌ம் என்று.துபாய்
ந‌க‌ரிலிருந்து வெகு தொலைவில் ஆள் அர‌வ‌ம் இன்றி இருந்த‌தாம்.
வேலை புல் தோட்ட‌த்தில் ,புல் அறுத்து ஒட்ட‌க‌த்துக்கு இடுவ‌து.

த‌ன் ஊரில் ,வீட்டில் உள்ள‌ மாட்டுக்கு கூட‌ ஒரு வேளை புல்
போடாத‌வ‌ன்.புது வாழ்க்கை புல்லே ஆன‌து கொடுமையாய் இருந்த‌து.
ஏஜென்ட் ஏமாற்றி இருக்கிறான்.பொறுத்து கொண்டு காசுக்காக‌ ப‌ணி
செய்த‌போது அர‌பி உரிமையாள‌ர் ச‌ம்ப‌ள‌மே கொடுக்காத‌ போது தான்
புரிந்த‌தாம்,அர‌பி நேர்மையான‌ ஆள் அல்ல‌ என்று.

மூன்று அல்ல‌து நான்கு மாதம் ச‌ம்ப‌ள‌மே இல்லையாம்.பின்பு ஒரு மாத‌ம் ச‌ம்ப‌ள‌ம் கிடைத்த‌தாம்.இப்ப‌டி ஒரு வ‌ருட‌ம் த‌ண்ட‌னையை க‌ழித்து,ஒரு நாள் சொல்லிக் கொள்ளாம‌ல் வெளியேறி துபாய் ந‌க‌ருக்கு சென்றிருக்கிறார்.

அங்கே வேறு ஒரு த‌மிழ் ந‌ண்ப‌ரின் உத‌வியுட‌ன் ஒரு கார் ஒர்க்ஷாப்‍‍‍-பில்
சேர்ந்திருக்கிறார்.இது முறை த‌வ‌றிய(illegal) பணி தான் என்ன‌ செய்வ‌து...குடும்ப‌த்தை காப்பாற்ற‌ வேண்டும்,முக்கிய‌மாக‌ வாங்கிய‌ க‌ட‌னுக்கு வட்டி க‌ட்டியாக‌ வேண்டும்.வெளியே த‌லையே காட்டாம‌ல் இரு வ‌ருட‌ங்க‌ள் வேலை செய்திருக்கிறார்,கிடைக்கும் ப‌ண‌த்தை தெரிந்த‌வ‌ர்க‌ள் மூல‌மாக‌ வீட்டுக்கும் அனுப்பி இருக்கிறார்.

இத‌னிடையே அரசு, விசிட் விசாவில் வ‌ந்து திரும்பாத‌வ‌ர்க‌ளுக்கும்,வேறு
வேலைக்கு த‌ப்பி ஓடிய‌வ‌ர்க‌ளுக்கும் க‌ருணை அடிப்ப‌டையில் த‌ங்க‌ள் நாடு
திரும்ப‌லாம் என‌ அறிவித்த‌து.அந்த‌ந்த‌ நாட்டு தூத‌ர‌க‌ங்க‌ள் மூல‌மாக‌ திருப்பி அனுப்ப‌ ஏற்பாடு செய்த‌து.விமான‌ டிக்கெட் எடுக்க‌ வ‌ழியில்லாத‌வ‌ர்க‌ளுக்கு
இந்திய‌ சேவை அமைப்புக‌ள் உத‌வி செய்த‌ன‌.

த‌ம்பி இதை அறிந்து இந்திய‌ தூத‌ர‌க‌த்தில் அடைக்க‌ல‌ம் ஆகியிருக்கிறார்.
அங்கு இருந்த‌ அதிகாரிக‌ள் இவ‌ர் க‌தையை கேட்டு உத‌வி செய்வ‌தாய் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கின்ற‌ன‌ர்.புல் தோட்ட‌த்து முத‌லாளி அர‌பியிட‌ம் பாஸ்போர்ட் மாட்டிக்கொண்ட‌தால்,சிர‌ம‌ப்ப‌ட்டு அர‌சின் ஆத‌ர‌வினால் த‌மிழ்நாடு வ‌ந்து சேர்ந்துள்ளார்.

கடைசியாக, இனி என்ன‌ செய்ய‌ப்போகிறீர்க‌ள் என‌க் கேட்டேன்.ப‌திலைக் கேட்டு திடுக்கிடத் தான் முடிந்த‌து.

''த‌டைக்கால‌ம்(Ban period) முடிந்த‌வுட‌ன் ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து மீண்டும்
துபாய் செல்வேன்.''

நிமிட்ஸ்‍‍‍‍‍ வருகையும்,நம் குய்யோ,முய்யோ‍-வும்!

Category :

ஆமாம்.ஜெ முதல் துறைமுக தொழிலாளர் சங்கம் வரை எதிர்க்கும் ஒரு செய்தியை பார்க்கிறோம்.

ஏன் இந்த ஊடகங்களும்,அரசியல்வாதிகளும் இந்த பலூனை ஊதி விளையாட்டு காட்டுகின்றனரோ தெரியவில்லை.ஒரு வேளை
வியாபாரமாக‌ இருக்கலாம்.அரசியல்வாதிகளுக்கு ஒரு இலவச விளம்பரத்திற்கான‌ வாய்ப்பாகவும் இருக்கலாம்.

இது ஒன்றும் புது நிகழ்வு அல்ல.ஏற்கனவே பிரஞ்சு அணுசக்தி கப்பல்கள் இந்தியா‍வுக்கு வந்து சென்றுள்ளன.அப்போது இந்த குரல்கள் எங்கு போயின‌ என்று புரியவில்லை?.

பொது மக்கள் கதிர் வீச்சினால் பாதிக்கப்படுவார்களாம்...என்ன கரிசனம்?இதுவே ரஷ்ய அணுசக்தி கப்பல் என்றால்,இந்திய காம்ரேடுகள்(தோழர் சீத்தாராம் யெச்சுரி உட்பட) வாயை சிவப்பு திரவத்தினால் ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

இங்கே நம்ம கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் மிகப்பெரிய அணுமின் உற்பத்தி நிலையம்(2000MW) அமைக்கும் பணி வெகு வேகமாக‌ நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த விசயமே.

இதனால் தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ மின்சாரம் கிடைக்கும்.பேச்சிபாறை அணையிலிருந்து ஒரு நாளைக்கு 30,891 M3/day அதாவது 3கோடி லிட்டர் தண்ணீரை அணுசக்தி உலைக்கு ப‌யன்படுத்தப் போகிறார்கள்.

இதன் மூலம் நம் உயிருக்கும் உலை வைக்கலாம்.அணுவினால் அல்ல...குடி நீரினால்.

அப்பாவும்,அம்மாவும்...ஆகாய விமானத்தில்!

Category :

ஆமாம்.இரு வாரங்களுக்கு முன் விடுமுறையில் பெங்களூரு‍‍க்கு குடும்ப‌ உறுப்பினர்கள்(நான்,மனைவி,மகன்,அப்பா & அம்மா) அனைவரும் விமானத்தில் சென்றோம்.

என் சின்ன ஆசையாய் இருந்தது,நிறைவேறியது..,மிக்க மகிழ்ச்சியாக‌ இருந்தது.கடலூரிலிருந்து பேருந்தில் நான்கு மணி நேர பயணம் செய்து,அரை மணி நேரத்தில் (Airbus-A320)பெங்களூரு வந்து சேர்ந்தோம்.
அம்மாவும்,அப்பாவும் மிகவும் ஆச்சரியமடைத்தனர்...முதல் விமான பயணம் சுலபமாய் முடிந்தது,கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
முதலில் நன்றி சொல்ல வேண்டியது...திரு.கோபிநாத் ,அவர்களின் ஏர் டெக்கான்-க்குத் தான்.அவர்தானே நடுத்தட்டு, கீழ் தட்டு மக்களையும் விமானம் ஏற வைத்தவர்.

பெங்களூரில் மூன்று தினங்கள் இருந்து அனைத்து இடங்களையும் பார்த்தோம்.பெங்களூரு‍-ம் சூடாகத் தான் இருந்தது.கணிணி நிறுவனங்கள் நிறைய வந்ததினால்,மிகப் பெரிய மாற்றம் எதையும் அடித்தட்டு மக்கள் பெற்று விடவில்லை என்பதை காண முடிந்தது.நிறைய பல அடுக்கு கட்டிடங்கள் வழியெங்கும் தென்பட்டன.கட்டிடத் தொழிலில் பெரும்பாலும் தமிழர்கள் தான் இருந்தனர்.

ப‌ய‌ண‌ம் இனிமையாய் முடிந்து வீடு திரும்பினோம்.

க‌டைசி வ‌ரி:

இனிய‌ ச‌கோதர‌,ச‌கோத‌ரிக‌ளே உங்க‌ள் பெற்றோர்க்கு ஏதேனும்செய்ய‌ விரும்பினால் த‌ய‌வு செய்து அவர்க‌ள் ஆரோக்ய‌மாய்,ந‌ல்ல‌நிலையில் உள்ள‌ போதே செய்யுங்க‌ள்.

காசு வ‌ரும் ,போகும்....?ஆனால்...!!!

கற்பு வேணுமா....கற்பு?

Category :

கற்''பூ''-வை மீண்டும் மலர வைக்கலாமாம்.
ஆமாம் ரூ.15000-ல் நீங்கள் இழந்த கற்பை பெறலாமாம்.
இது எங்கோ மேற்கத்தய நாடுகளில் நடப்பதல்ல....
நம்ம மும்பை-யில் தான்.

இந்த அரை மணி நேர அறுவை சிகிச்சை-யை செய்துகொள்வது
காதலித்து ஏமாந்த கல்லூரி பெண்களும்,கல்யாணத்துக்கு தயாரான
கன்னி கழிந்த பெண்களுமாம். இப்போது இந்த ஆபரேஷன்
மும்பை-யில் சூடு பிடித்துள்ளதாம்...

இந்த அறுவை சிகிச்சையை செய்வது நட்சத்திர''பிளாஸ்டிக் சர்ஜன்" மேலும் இந்த ஆபரேஷனுக்கு பெயர் ''Hymenoplasty".
விளக்கமாக கூறினாலும் அசிங்கப்படத் தேவை இல்லை..ஏனெனில் இது அறிவியலின் ஒரு பங்கு தான்.அதாவது உறுப்பின் மேல் புறத்தில்,படர்ந்திருக்கும் ஒரு திசுவிலான ஜவ்வாடை(Hymen)-யைத் தான் செயற்கை முறையில் பொருத்துகின்றனர்.

ஆணவ,அதிகார ஆண்களே இனிமேல்....இனிமேல் சந்தேகப்பட முடியாது முதல் இரவு......முதல்தான்...

கடைசி வரி:

ஆண்களுக்கும் இந்தமாதிரி ஏதாவது....சமாச்சாரம் இருந்தால்,
கல்யாணம் வரை கற்புடன் இருந்திருக்கிறானா..என அறியலாம்....
என்ன செய்வது படைத்தவன்....பிரம்மன் என்ற ஆண் அயோக்கியன் ஆயிற்றே!

தகவல்:dna,Mumbai

சென்னைப் பதிவர்களே....காமகேடி பூஜ்யஸ்ரி-பேசுகிறார்?

Category :


நேரம் கிடைத்தால் சென்று அருள் ஆசி வாங்கி,
எங்களுக்கும் ஓசி-யில் வழங்குங்கள்.
இன்று மாலை:6.00மணி,
இடம்:மியுசிக் அகாடமி





நன்றி:தந்தி

கிரிக்கெட் உலக கோப்பை- 2011, இந்தியாவுக்கே!

Category :


ஆமாம்...கிரிக்கெட் பிரியர்களே....

எப்படி என்று தானே அதிர்ச்சி அடைகிறீர்கள்?...

I.இப்ப நம்ம கோச் செப்பல்(Greg Chappell) ஆஸ்திரேலியா-காரர் தானே,அது மாதிரி 11 ஆட்டக்காரர்களையும் ஆஸ்திரேலியாவிலிருந்து தள்ளிக்கிட்டு வந்தா......நமக்குத் தானே கோப்பை???

BCCI- யே தயவு செய்து இப்போதே ஏற்பாடு செய்யுங்கள்.
அப்ப, நம்ம டீமை என்ன பன்றதூன்னு தானே கவலைப் படறீங்க....கவலையே வேணாம்....நம்ம ஆளுங்களுக்கு
இன்னும் விளம்பரப் படங்கள் பாக்கி இருக்கே!!

II. இல்லையென்றால் கீழ்கண்ட நாடுகளை மட்டுமே , அடுத்த 2011 உலக போட்டிக்கு அழைக்கவேண்டும்.

1.அமெரிக்கா
2.சீனா
3.ரஷ்யா
4.பிரான்ஸ்
5.இத்தாலி
6.ஜப்பான்
7.தென் கொரியா
8.சவுதிஅரேபியா
9.நார்வே
10.எத்தியோப்பியா
11.சிங்கப்பூர்
12.மலேசியா
13.ஈரான்
14.ஈராக்
15.ஆப்கானிஸ்தான்
16.இந்தியா....

கடைசி வரி:
2007-உலக கோப்பை..பரிசுக் குறிப்பு.
கோப்பை+ பரிசு பணம்-ஆஸ்திரேலியா பெற்றது- 2.2 மில்லியன் டாலர்
பறி கொடுத்த இலங்கைக்கு- 1மில்லியன் டாலர்
நமக்கு ,
பெர்முடா-வை வீழ்த்தியதிற்கு - 10,000டாலர்
பங்களாதேஷ்-யிடம் படுகாயம் அடைந்ததிற்கு - 5,000டாலர்
இலங்கை-யிடம் தோற்று இடத்தை காலி செய்ததிற்கு - 5,000டாலர்
ஆக, மொத்த வருமானம் - 20,000 டாலர்......

நன்றி:ராய்டர்,என்டி டிவி...AP

நாணயம் தவறியவர்கள்!!!

Category :

இப்போதெல்லாம் தினசரி செய்திதாள்களைப் படிக்கும்போது அடிக்கடி தென்படும் கால் பக்க,அரை பக்க பொது விளம்பரத்தைக் காணலாம்.
அவ் விளம்பரம் இதோ,''வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத நாணயம் தவறியவர்கள்".

குறிப்பாக கடன் வாங்கியவரின் புகைப்படமும்,கூடுதலாக ஜாமீன் கொடுத்தவர் புகைப்படமும் இனைந்திருக்கும்.அவர்கள்பெற்ற கடன் எதோ கோடி ரூபாய் என நினைக்காதீர்கள்.வெறும் 50ஆயிரம் முதல் 1லட்சம் வரை தான்.

இதற்குத் தான் இந்த மக்கள் வங்கிகள்(பொதுத் துறை வங்கிகள்)நடுத்தர மக்களுக்கு ''நாணயம் தவறியவர்கள்'' என பட்டம் வழங்குகின்றன.குறிப்பாக இந்த வங்கிகள் கடன் கொடுக்கும் முன்பே,விசாரித்து தான்,கடன் கொடுக்கின்றன.நல்ல வருவாய்,நிரந்தர பணி போன்றவகளை வைத்துதான் அனுமதி வழங்குகின்றனர்.ஏதோ போதாதகாலம்,கடன் பெற்றவர் அசலை கட்ட தாமதமாகும் போதுதான் இந்த வங்கிகள் இந்த மாதிரி அநாகரீக விளம்பரங்களை வெளியிடுகின்றன.

கூர்மையாக கவனித்தால் ,கடன் பெற்றவர்கள் பெரும்பான்மையானோர்,வீடு கட்டத் தான் வாங்கி இருப்பர்.ஏன் இச் சிறு தொகைக்கு இவ்வளவு செலவு செய்து,விளம்பரம் செய்கின்றனர்?.வங்கிகள் விளம்பர செலவையும் கடனில் ,அசிங்கமாக சேர்த்துக் கொள்வர்.ஆனால் இதே வங்கிகள் தொழிலதிபர்களுக்கு 100கோடி,200கோடி கொடுத்துவிட்டு நாய்(இந்த வார்த்தைக்கு மன்னியுங்கள்) மாதிரி அவர்கள் பின்னால் திரிவர்.
அந்த ஏமாற்றிய தொழிலதிபர், நாமம் சாத்தினாலும்,இவர்கள் இந்தமாதிரி அருவருப்பான பொது விளம்பரம் செய்வதில்லை.மாறாக நீதித் துறை(கோர்ட்)மூலம் தான் மனு செய்கின்றனர்,சொத்துகளை ஏலம் இட.

இன்றும் எத்தனையோ ஏமாற்றிய தொழிலதிபர்கள்,அரசியல் வாதிகள் மரியாதையுடன் தான் வலம் வருகின்றனர்.அவர்களைப் பற்றி இதே வங்கிகள் ''நாணயம் தவறியவர்'' என விளம்பரம் வெளியிடும் தைரியம் இருக்கிறதா?.,

அப்படி தைரியமாக வெளியிட்டால்,தினசரி செய்திதாளில் செய்திபோட முடியாது,ஏமாற்றிய தொழிலதிபர்களின் விளம்பரமே ....தினசரி சீரியல் மாதிரி போகும்.வங்கி அதிகாரிகளே, தைரியம் இருந்தால்.......செய்யுங்கள் பார்ப்போம்.

கடைசி வரி:
அய்யா டிபிஆர் ஜோசப்,அய்யா மெலட்டூர் நடராஜன்,அய்யா ஞானவெட்டியான் அவர்களே நீங்களாவது பதில் சொல்லுங்கள்.

இந்தியர்களே நமக்கு என்ன ஆச்சு?

Category :

இது கிரிக்கெட் பற்றிய பதிவு அல்ல.ஏன் நம் மக்கள் அகம்பாவத்துடன் நடந்து கொள்கின்றனர் என்பதின் தாக்கம் தான் இது?.அமெரிக்க,பிரிட்டிஷ்காரன் மாதிரி ஏன் நாம் மார்த்ட்டிக்கொள்ள வேண்டும்.,ஆணவம் கொள்ள வேண்டும்.

இந்தியா ,பங்களாதேஷ்-யிடம் தோல்வி அடைந்தது நிறைய நண்பர்களுக்கு அதிர்ச்சி.அவர்களுக்கு இது விளையாட்டு என்பது(சூது அல்ல)ஏன் புரியாமல் போகிறதோ?ஏன் நமக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லை?

ஒத்துக் கொள்கிறேன்,இந்தியனை இணைக்கிறது.அதே சமயம் அடுத்தவனை ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்.புரிந்து கொள்ளுங்கள் இது நம் மண்ணின் விளையாட்டல்ல மேலும் இது ஒரு வர்த்தக விளையாட்டு என்பதை புரிந்து கொள்ள எத்தனை காலம் ஆகப்போகிறதோ நமக்கு?

ஏதன்ஸ் 2004 ஒலிம்பிக்...மெடல் பட்டியலில்..இந்தியாவை பாருங்கள்,
0-தங்கம்,1-வெள்ளி,0-வெங்கலம்.ஆனால் ஒரு சிறிய நாடான க்யுபா-வை பாருங்கள் 9-தங்கம்,7-வெள்ளி,11-வெங்கலம்.

இந்தியர்களே ,கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டு தான்,ஆனால் அதையும்விட மேன்மையான விளையாட்டுக்கள் உள்ளதை மறவாதீர்.
இந்தியா 2020 மகிழ்ச்சி தான்.....வலிமையான இந்தியா.....வளமையான இந்தியா....அதற்கு முன்பு அடுத்த பீஜிங் 2008-ஒலிம்பிக் போட்டி-யில்
2-தங்கமாவது வாங்க முயற்சி செய்வோம்(காசு கொடுத்து அல்ல)?.
அது கூட முடியவில்லை-யெனில் அர்த்தமே இல்லை.

இந்தியனே, விளையாட்டை விளையாட்டாய் பார்ப்போம்.அது தான் மனித நாகரீகத்தின் அடையாளம்.

கிரி (அ)வலம் ! -பாகம்- 1

Category :

போன மாதம் என் நண்பர் வற்புறுத்தலினால் ஒரு நாள் பயணமாக திருவண்ணாமலைசென்றோம்.கூட நான்கு நண்பர்கள்...வாடகை காரில் பயணம்....
அதிகாலை 4மணிக்கு கடலூரிலிருந்து புறப்பட்டோம்.வழி பாண்டி,திண்டிவனம்,செஞ்சி,என........

நண்பர் பகுத்தறிவாளர்.....இருந்த போதிலும் கார் வலத்தின் மூலம்....என்ன நடக்கிறது எனதெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்.சிற்றுண்டியை திருவண்ணாமலையில் முடித்தோம்.

பின்பு அப்படியே படியேறினோம்.வழியெங்கும் சித்தர்கள்,சித்தர்கள்...கையில் சுருட்டு அல்லது சிகரெட்டு ....உற்சாகமாய் ஊதித் தள்ளினர்...அரை கிலோமீட்டர் தூரம் சென்றோம்...வழியெங்கும் ஏராளமான அறக்கட்டளைகள்.....சில சித்தர்களின் வாயையும் நாங்கள் கிளறத்தவறவில்லை.ஒன்று மட்டும் தெரிந்தது....வாழ்க்கையை எதிர் கொள்ள முடியாமல்...குடும்பத்தைக் கூடகாப்பாற்ற முடியாமல் ஓடி வந்த மகா மட்டமானவர்கள்....(இங்கே சித்தர்கள்...ஞானிகள்....என்ற போர்வையை மாட்டிக் கொண்டு)

சுமார் இரண்டு மணிநேரம் மலையில் இருந்து விட்டு,இறங்கி ....முதலாவதாக ரமணர் ஆசிரமம்சென்றோம்.இந்தியர்களை விட வெளிநாட்டினர் அதிகம் தென்பட்டார்கள்.செருப்பை ஒரு மூலையில்வைத்து விட்டு உள்ளே சென்று அனைத்தையும் கண்டோம்.நிறைய மக்கள் தியானத்தில் இருந்தனர்.எல்லோரும் மேல் தட்டு மக்களாக இருந்தனர்.....கீழ் தட்டு மக்களை கண்டது,அவர்கள் போட்ட 12 மணி அன்ன தானத்தின் போது தான்.....

இளைஞர்கள் கூட வரிசையில்.....அசிங்கமில்லாமல்.....உழைத்து உணவு உண்ணும் வயதில் பிச்சைக்காரனாய்.....இதுதான் சுகமான வாழ்க்கை என வழி தவறி விட்டார்களோ?.....பாவம்...அவர்களை பெற்றவர்கள்...
அங்கே ஒரு அழகான வெள்ளை மயில்....திரிந்து கொண்டிருந்தது...பூங்காவும் இனிமையாகவைத்திருந்தனர்.

அடுத்த இடம்...விசிறி சாமியார் என அழைக்கபடும்....ராம் சுரத்குமார் ஆசிரமம்....மண்டபம் ஆடம்பரமாக இருந்தது.இங்கேயும் தியானம்.....தியானம்....எதையோ இழந்து இங்கு வந்துதேடிக் கொண்டிருந்தனர்.தியான மண்டபம் மிக சுத்தமாக இருந்தது...அனைத்தையும் பார்த்துவிட்டுபிரதான சாலைக்கு வந்தோம்,அங்கிருந்த டீ-க்கடையில் தேநீர் பருகினோம்,பெண்மனி தான் கடையின் நிர்வாகியாம்.பெருமையாக இருந்தது...பிச்சைகாரர்களின் ...படையெடுப்பு அதிகமாககாண முடிந்தது,பின்பு தான் புரிந்தது...டீ-தானம் திருவண்ணாமலை-யில் செய்யப்படுவதில்லை என.

பின்பு நண்பர், பேக்கரி-கடைக்கு சென்று வறிக்கி பிஸ்கட்டும்,ஒரு பை நிறைய வாழை பழமும்வாங்கி வந்தார்.நண்பரிடம் எதற்கு இவ்வளவு எனக் கேட்ட போது....அப்புறம் சொல்கிறேன் என்றார்.

மீதி அடுத்த பதிவில்....கை வலிக்கிறது....