கிரிக்கெட் 20/20-ம்,அலங்கோல ஆட்டமும்!!!

Category :

விசயத்துக்கு வருவோம்.

நம்ம ஜனங்க ஏன் இப்படி வச்ச கண்ணு மாறாம IPL 20/20 பார்க்குறாங்கன்னு கீழ பாருங்க புரியும்.


முன்னாடி தான் நம்ம திரைப்படங்களில் ஒரு காட்சியாவது புடவையை அவிழ்த்து காட்டுவார்கள்.(அதாங்க கற்பழிப்பு)அதையெல்லாம் பார்த்து சலிச்சு போன நம்ம சனங்களுக்கு கிரிக்கெட்டு நடத்தறவனே ஒரு ''ரெக்கார்டு டான்ஸ்'' கூட்டத்தையும் ஆட வச்சி வெளயாட்ட காட்டறான்.

கிரிகெட்டு ஆட்டம் மப்பா இருந்தாலும் இவங்க ஆட்டத்தால டி.ஆர்.பி (TRP)ரேட்டிங் ஏறுதாமா???

ஏறாதா பின்ன????

ஹேப்பி பொங்கல்!

Category :

ஒரு வழியாக தை பிறந்து,பொங்கல் விழாக்களும்
கழிந்து விட்டன.
தை முதல் நாள் அன்று காலையிலேயே கடலூரை வலம் வந்தேன்.நிறைய கோலங்களை காண முடிந்தது...அழகழகாய்...."Happy Pongal"என்ற வாழ்த்துகளுடன்.தமிழனின் திருநாளைக் கூட ஆங்கில வாசனையுடன் கொண்டடுவது வேதனையாக இருந்தது.நம் பெயருக்குமுன்னால் தொங்கிக்கொண்டு இருக்கும் ஆங்கில தலை எழுத்தைப் போல.

முன்பு போல் பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் சுத்தமாக குறைந்து போய்விட்டது.தபால் துறையினருக்கு பெரும் வருமானம் குறைந்திருக்கும்.ஏனென்றால் அனைவரும் குறுஞ்செய்தி (SMS) மூலம் வாழ்த்தை முடித்துக் கொண்டுவிட்டனர்.

மாட்டுப் பொங்கல் அன்று கடலூர் பகுதியில் நிறைய இடங்களில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இரு தின‌ங்க‌ள் க‌ழித்து "ஆற்றுதிருவிழா"வும் இனிமையாக‌ நடந்தேறின‌‌.பெண்ணையாற்றின் க‌ரையில் வெளியூர், உள்ளூர் சாமிக‌ளின் தீர்த்த‌வாரி‍யும் ந‌டைபெற்ற‌ன‌.

க‌டைசி வெறி:

இப்போதெல்லாம் புதிய‌ தமிழ் திரைப‌ட‌ங்க‌ளின் இடைவேளை ஆங்கில‌த்தில் தான் INTERMISSION செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌.த‌மிழ‌ர்க‌ளூக்கு இடைவேளை புடிக்காதோ என‌த் தெரிய‌வில்லை?.

ஆங்கில புத்தாண்டும்,நம் ஆடம்பர அலங்கோலமும்?

Category :

இன்று "நியு இயர்".NEW YEAR ஆரம்பம்!!...

ஆமாம்...ஜனவரி ஒன்று என்பது உலகெங்கும் கொண்டாடப்படும் தினம் தான்.ஆனால் தமிழன் ,ஆங்கில ஒன்னைக் கூட‌அசிங்கமாய் கொண்டாடக் கற்றுக் கொண்டு விட்டான்.

நேற்று இரவே 12 மணிக்கு வெடிச்சத்தத்துடன் நம்ம மாரியாத்தா கோயிலில் கூட புத்தாண்டை ஆரம்பித்தனர்.விடிந்தவுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று ஆண்டவனுக்கும் ஹேப்பி நியு இயர் சொல்லி மகிழ்ந்தனர்.
இந்தமாதிரியான கேளிக்கை கூத்துகள் சில வருடங்களாகத்தான் வேர் விட்டுக் கொண்டுள்ளன.

எங்கள் பக்கத்து தண்ணீர் தேசத்தில்(புதுச்சேரி தான்!!!) இரவு முழுதும் நட்சத்திர ஹோட்டல்களில்(விடுதி)....ஆட்டமும்,பாட்டுமுமாக‌ அரங்கேறி உள்ளன.
த‌மிழனின் அடையாளங்கள்,ஆட்டம் கொண்டு இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.

தமிழினமும் விளம்பர யுகத்தில் மாட்டிக்கொண்டு விடியலைத்தொலைத்து கொண்டிருக்கிறதோ என ஐயமாக உள்ளது
.

சன் டி.வி‍‍‍‍‍-ன் நகல் டி.வி?

Category :

ஆமாம்! போன வாரத்திலிருந்து ஒளிபரப்பாகும்
கலைஞர் தொலைக்காட்சி,தமிழகத்தை கலக்கும் என எதிர்பார்த்தால்
அது சன்‍‍-ன் ஜெராக்ஸ் காப்பியாக பிற‌ந்துள்ளது.

அப்பட்டமான சினிமா மூலதனங்கள், அசிங்கமான
சீரியல்கள் (பெயர் நெடுந்தொடர்....தமிழாக்கி இருக்கிறார்கள்).
மற்றபடி இது ஒரு முழுமையான மற்றுமொரு மசாலா டிவி.
தமிழனுக்கு சோறு கிடைக்கிறதோ இல்லையோ,, வித,விதமான‌
வெட்டி சேனல்களுக்கு குறை இல்லாமல் கிடைக்கிறது.

தமிழகம் இந்த சேனல் புற்றுநோயிடமிருந்து மீள வழியே இல்லை
என்றே தோன்றுகிறது.

மூட்டைப்பூச்சிக்கு பயந்து...?!

Category :

வீட்டைக் கொளுத்த‌லாமா?...

செல்ல(லா) ப‌திவ‌ர்க‌ளே என்ன‌
ஆயிற்று உங்க‌ளுக்கு....சில‌ வார‌ங்க‌ளாக‌ த‌மிழ்ம‌ண‌ம் அழுகிய‌
ம‌ண‌த்துட‌ன் வாழ்ந்து கொண்டிருப்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும்.

நிறைய‌ பேர் வேடிக்கை பார்த்தோம்,ஒப்புக்கொள்கிறோம்.,
ப‌திவைத்தாண்டி ஒரு வார்த்தைப் போர் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌தினால்
நிறைய‌ பேர் அமைதி காத்திருக்க‌க் கூடும்.நிறைய‌ பேர் காய‌ப்
ப‌டாத‌தினாலும் அமைதியாய் இருந்திருக்க‌க் கூடும்.

இப்போது என்ன ''குடி'' முழுகிப் போய்விட்ட‌து...விடைதான்
பெற்றாகிவிட்ட‌தே...பின் ஏன் விடை பெற‌வேண்டும் ப‌திவுல‌கிலிருந்து?.
வாருங்க‌ள் ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ளே ப‌திவைப் போடுங்க‌ள்...படிப்ப‌வ‌ர்
ப‌டிக்க‌ட்டும்....படிக்காத‌வ‌ர் பார்க்க‌ட்டும்...?

ந‌ம் ஊரிலே ,ப‌க்க‌த்திலேயே ''முள்ள‌மாரி,முடிச்ச‌விக்கி,அயோக்கிய‌ன்,
விப‌ச்சார‌ன்,விப‌ச்சாரி,மென்பொருள் திருட‌ன்,பெண்பொருள் திருட‌ன்,
அர‌சிய‌ல் திருட‌ன் போன்றோருட‌ன் வாழ‌வில்லையா நாம்.இன்னும்
சில‌ கொடிய‌ வில‌ங்குக‌ள் கூட‌ வாழ‌ப் ப‌ழ‌கிக் கொண்டுள்ளோம்.
அதுமாதிரி இந்த‌ இணைய‌த்திலும் சில ''ம‌ன‌ நோயாளிகள்'' இருக்கின்ற‌ன‌ர்.
எங்கேயாவ‌து த‌ன் உள‌ர‌லை அவ‌ர்கள் கொட்டி விட்டுப் போக‌ட்டுமே.....

ப‌டித்த‌வ‌ன் என‌க் கூறிக்கொள்வப‌வ‌ன் எத்த‌னை பேர் ப‌ண்புட‌ன்
ந‌ட‌ந்து கொள்கிறான்...இதில் பெண்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌...
நாம் அன்றாடம் பார்க்காத‌,கேட்காத‌ அசிங்க‌ங்க‌ளா....இந்த‌ வ‌லைப் பூக்க‌ளில்
புதிதாக‌ பார்க்கிறோம்..பின் ஏன் இங்கே ம‌ட்டும் கூச்ச‌ல்?...,

சென்னை ப‌திவ‌ர் ப‌ட்ட‌றை‍-2007 க்கு சென்றுவ‌ந்த‌ பின் தான் புரிந்த‌து....
நிறைய‌ த‌மிழ்ம‌ண‌ ப‌திவ‌ர்க‌ள் குழுவாக‌ செய‌ல்ப‌ட்ட‌து...அத‌னால் ''அல்ல‌ல்''
ப‌டுவ‌து.நிறைய‌ ப‌திவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தொலைபேசி,மின்னஞ்ச‌ல்,சாட்,
போன்ற‌ ''முத‌லைக்குள்'' மாட்டிக் கொண்டு இருந்த‌தை.இதுதான் அடுத்தவ‌னை காட்டிக் கொடுக்க‌ ஏதுவாக‌ இருந்திருக்கும்.

இந்த‌ ''குழு ச‌க்தி'' தான்....எல்லா பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் கார‌ண‌ம் என‌ நினைக்கிறேன்.க‌ருத்து திணிப்புக்கும்,அடாவ‌டிக்கும் இதுதான் ''தீ''யாக‌
இருந்திருக்கும்.மாற்றுக் க‌ருத்தை அசிங்க‌மாக‌ ஆராய‌ தூண்டிய‌து...அசிங்க‌த்தை கிள‌ர‌ தூண்டிய‌து இந்த‌ தேவைய‌ற்ற‌ உற‌வுக‌ள் தான் என‌ நினைக்கிறேன்.
இந்த‌ கூட்ட‌த்தின‌ர் ஒரு கால‌த்தில் ஒட்டி,உற‌வாடியும் வ‌ந்துள்ள‌ன‌ர்.

ஆக‌வே த‌மிழ் வ‌லைப்பூக்க‌ளின் உயிர்க‌ளே வாருங்க‌ள்., ப‌ழ‌தை ம‌ற‌ப்போம்.
''புதிய‌ ப‌யிரிடுவோம்....???

க‌டைசி வெறி:

இந்த‌ வ‌லைபூக்க‌ளினால் அடித்த‌ட்டு ம‌க்க‌ளுக்கு ஒரு ப‌ய‌ணும் இல்லை.ஆனால் ந‌ம் அனுப‌வ‌ங்க‌ள் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளுக்கு
பாடமாகவாவது ப‌ய‌ன்ப‌ட்டாலே
பெரிய‌ வெற்றி தான்.

த‌மிழில் ஒரு இர‌ண்டாயிர‌ம் வ‌லைபூக்க‌ளில் ,சில‌ நூறுதான் உயிரோடு
இருக்கும் என‌ நினைக்கிறேன்.இந்த‌ நூறில் ஒரு இருப‌து பேர் கும்மி அல்ல‌து
குழு ப‌திவ‌ர்க‌ள்,புதிதாக‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் முக‌ப்பை பார்த்த‌வுட‌ன் ஓட்ட‌ம்
பிடித்தோர் எத்த‌னை பேரோ???

ச‌கோத‌ர‌ ,ச‌கோத‌ரிக‌ளே த‌மிழுக்காவாவது, நாம் ந‌ம் ப‌ய‌ண‌த்தை
தொட‌ர‌லாமே...!!!

''வ‌லைப்பூக்க‌ள் வாழ‌ட்டும்
ந‌றும‌ண‌ம் இல்லையென்றாலும்,
வ‌ச‌ந்த‌ம் ஒரு நாள் வீசும்
அத‌ன் வாழ்க்கையை மாற்ற‌?"

மகாநடிகனும்,பெரியார் மோதிரமும்...?

Category :

நடிகர் சத்தியராஜ்-‍க்கு பெரியார் மோதிரத்தை திராவிடர் கழக
தலைவர் வீரமணி அளித்தாலும் அளித்தார்...அதுபற்றி புளகாங்கிதம் அடைகிறார்கள் சிலர்.உண்மையிலேயே பெரியார் கொள்கைகளுக்கு நேர் மாறானது...இந்த சங்கதிகள்...

பெரியார் அணிந்திருந்த மோதிரத்தை,அடுத்தவர் அணிவதால் என்ன‌ ப‌ய‌ன்? மேலும் இது ப‌குத்த‌றிவிற்கே சவாலான செயலும் கூட‌.சாய்பாபா ப‌ட‌ம் போட்ட‌ மோதிர‌ம் அணிவ‌து மாதிரி.....ஒரு ச‌முதாய‌ சீர்திருத்த‌ ந‌டிக‌னை,நாய‌க‌னை பாராட்ட‌,எத்த‌னையோ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌வே.அய்யா வீர‌ம‌ணி அவ‌ர்க‌ளே ஏன் இந்த‌ த‌டுமாற்ற‌ம்...


என்ன‌ ஆயிற்று...இன‌ முர‌சு ச‌த்திய‌ராஜ்-க்கு....பெரியாராக‌ ந‌டித்த‌த‌ற்காக‌ அளித்தார்க‌ளாம்.இவ‌ர் ஏற்றுக் கொண்டாராம்....அய்யா,இந்த‌மாதிரி மூடப் பழக்கங்களை,பைத்திய‌க்கார‌த் த‌ன‌த்தைத்தானே வாழ்நாள் முழுதும்
எதிர்த்தார் பெரியார்.

ச‌த்தியராஜ் அவ‌ர்க‌ளின் பேச்சினை ஒலிநாடா மூல‌ம் கேட்டு இருக்கிறேன்.மிக‌வும் அருமையான மற்றும் சிந்த‌னையை த‌ட்டி எழுப்பும் பேச்சுக‌ள் அவை.

அனைவ‌ருக்கும் புரியும்ப‌டியான‌,அதே நேர‌த்தில் சுருக்க‌மான‌ பேச்சு ம‌கா ந‌டிக‌னுடைய‌து.அவ‌ர் நிச்ச‌ய‌மாக‌ ப‌குத்த‌றிவை த‌மிழ் ம‌க்க‌ளுக்கு மீண்டும் ஊட்ட‌,பெரும் ப‌ங்கு வ‌கிக்க‌ முடியும்.செய்வாரா தெரிய‌வில்லை....?

கடைசி வெறி:


1.போன‌ வார‌ம் வேலூர்‍ ப‌க்க‌த்தில் ஒரு த‌ங்க‌ கோவில் (300 கோடியில்)க‌ட்டியுள்ளார் ஒரு சாமியார்.அவ‌ர் அந்த‌ த‌ங்க‌த்தை ரிச‌ர்வ் பேங்க் ஆப் இந்தியா(RBI) மூல‌மாக வாங்கினாராம்.அந்த‌ இட‌ம் நூறு ஏக்க‌ர் நில‌த்தில் அமைந்துள்ள‌தாம்.அந்த‌ கோயிலுக்கு கும்பாபிசேக‌ம் ந‌ட‌ந்த‌ போது,பொதும‌க்க‌ளுக்கு அனும‌தி இல்லையாம்.....எல்லாம் வெள்ளை கார‌ணுக்குதானாம்.

என்ன‌மோ ந‌ட‌க்கிறது மக்களே.,...உஷார்....உஷார்....

2.சென்னை கபாலீச்வ‌ர‌ர் கோயில் கோபுர‌த்தை இடி தாக்கிய‌தாம்....கோபுர‌ப‌ட‌த்தை வைத்து ஒரு "பால‌ஸ்தான‌ பூஜை" செய்தார்க‌ளாம்....எப்பா பூஜையை எப்ப வேணாலும் நடத்தலாம்...

மொத‌ல்ல‌ இடி தாங்கி வைங்க‌....மக்கள காப்பாத்துங்க...
(ப‌ட‌ம் சுட்ட‌து:மாலைச்சுட‌ர்)

சொந்த செலவில் சூனியம்?

Category :

அப்படித் தான் தெரிகிறது.தெரியாத்தனமா "சிவாஜி" திரைப்
படத்துக்கு என் நாலரை வயது மகன் மற்றும் நான்கு வயதுடைய‌
தங்கை மகனை அழைத்து போனது தவறான முடிவோ எனத்
தோன்றுகிறது.

ஊரும்,ஊடக உலகமும் "சிவாஜி,சிவாஜி.....வாஜி,வாஜி,பாவ்ஜி...என‌
கூச்சல் போட்டதால் ஒரு ஆசையில் போய்விட்டோம்.
இப்படம் தான் அந்த இரு சிறுவர்களுக்குமே முதல் திரைப்படம்.இருவ‌ரும்
தூங்காம‌ல் பார்த்துகொண்டிருந்த‌து ஆச்ச‌ரிய‌மாக‌வும் இருந்த‌து.
அடுத்த‌ நாள் முத‌ல் ஆர‌ம்ப‌மான‌து...."சிங்க‌ம் சிங்கிளாத்தான் வ‌ரும்".....

இப்போது தான் வினையே ஆர‌ம்ப‌மாகியுள்ள‌து.சிறுவ‌ர்க‌ளின் போக்கு
தாறு,மாறாக‌ உள்ள‌து.கால்க‌ள் தானாக‌ உய‌ருகின்றன‌...அவ்வ‌ப்போது
க‌ட்டிலிலிருந்து ப‌ற‌க்க‌,விழுகிறார்க‌ள்.

கூட‌வே தொலைக்காட்சியும்(இல்லை டி.வி) திரும்ப‌,திரும்ப‌ இந்த‌
ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ளையும்,காட்சியையும் காட்டி தொந்த‌ர‌வு செய்த‌தால்
அவ‌ர்க‌ளின் பார்வை ர‌ஜினியின் மேல் ப‌ட்டு விட்ட‌து.

இதையெல்லாவ‌ற்றையும் விட கொடுமையான‌து என்ன‌வென்றால்,உன் பெய‌ர் என்ன‌ என‌ யாராவ‌து என் மகனிடம் கேட்டால்''ர‌ஜினி" என‌ கூறுவ‌து தான்.ப‌ள்ளிக்கூட‌த்தில் போய் விசாரித்தோம்...அங்கு த‌ன் பெய‌ரை ஒழுங்காக‌ கூறுகிறானாம்.அங்கு அட‌க்க‌மாக‌ உள்ளானாம்.

வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் வேலையை ஆர‌ம்பித்துவிடுகிறான்.....குதிப்ப‌து,தாவுவ‌து
என‌ப் போன்ற‌ சேட்டைக‌ள்....நானும் விள‌க்குகிறேன்....மேலும் ரஜினி சன்டை போடமாட்டார்,அவருக்கு ''டூப்'' இருப்பார்கள் எனத் திரும்ப,திரும்ப கூறவேண்டியுள்ளது.சினிமாவில் குதிப்ப‌து...
சும்மா என்று....ப‌ஞ்சு மெத்தை‌யில் தான் அவ‌ர்க‌ள் குதிப்பார்க‌ள்...நாம் அது
மாதிரி குதித்தால் கால் உடைந்து விடும் என்று...

க‌ண் கூடாக‌ தெரிந்த‌து,குழ‌ந்தைக‌ள் எவ்வாறு ஊட‌க‌ சாத‌ன‌ங்க‌ளால்
மாற்ற‌ப்ப‌டுகிறார்க‌ள் என்ப‌தை....!