கிரி (அ)வலம் ! -பாகம்- 1

Category :

போன மாதம் என் நண்பர் வற்புறுத்தலினால் ஒரு நாள் பயணமாக திருவண்ணாமலைசென்றோம்.கூட நான்கு நண்பர்கள்...வாடகை காரில் பயணம்....
அதிகாலை 4மணிக்கு கடலூரிலிருந்து புறப்பட்டோம்.வழி பாண்டி,திண்டிவனம்,செஞ்சி,என........

நண்பர் பகுத்தறிவாளர்.....இருந்த போதிலும் கார் வலத்தின் மூலம்....என்ன நடக்கிறது எனதெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்.சிற்றுண்டியை திருவண்ணாமலையில் முடித்தோம்.

பின்பு அப்படியே படியேறினோம்.வழியெங்கும் சித்தர்கள்,சித்தர்கள்...கையில் சுருட்டு அல்லது சிகரெட்டு ....உற்சாகமாய் ஊதித் தள்ளினர்...அரை கிலோமீட்டர் தூரம் சென்றோம்...வழியெங்கும் ஏராளமான அறக்கட்டளைகள்.....சில சித்தர்களின் வாயையும் நாங்கள் கிளறத்தவறவில்லை.ஒன்று மட்டும் தெரிந்தது....வாழ்க்கையை எதிர் கொள்ள முடியாமல்...குடும்பத்தைக் கூடகாப்பாற்ற முடியாமல் ஓடி வந்த மகா மட்டமானவர்கள்....(இங்கே சித்தர்கள்...ஞானிகள்....என்ற போர்வையை மாட்டிக் கொண்டு)

சுமார் இரண்டு மணிநேரம் மலையில் இருந்து விட்டு,இறங்கி ....முதலாவதாக ரமணர் ஆசிரமம்சென்றோம்.இந்தியர்களை விட வெளிநாட்டினர் அதிகம் தென்பட்டார்கள்.செருப்பை ஒரு மூலையில்வைத்து விட்டு உள்ளே சென்று அனைத்தையும் கண்டோம்.நிறைய மக்கள் தியானத்தில் இருந்தனர்.எல்லோரும் மேல் தட்டு மக்களாக இருந்தனர்.....கீழ் தட்டு மக்களை கண்டது,அவர்கள் போட்ட 12 மணி அன்ன தானத்தின் போது தான்.....

இளைஞர்கள் கூட வரிசையில்.....அசிங்கமில்லாமல்.....உழைத்து உணவு உண்ணும் வயதில் பிச்சைக்காரனாய்.....இதுதான் சுகமான வாழ்க்கை என வழி தவறி விட்டார்களோ?.....பாவம்...அவர்களை பெற்றவர்கள்...
அங்கே ஒரு அழகான வெள்ளை மயில்....திரிந்து கொண்டிருந்தது...பூங்காவும் இனிமையாகவைத்திருந்தனர்.

அடுத்த இடம்...விசிறி சாமியார் என அழைக்கபடும்....ராம் சுரத்குமார் ஆசிரமம்....மண்டபம் ஆடம்பரமாக இருந்தது.இங்கேயும் தியானம்.....தியானம்....எதையோ இழந்து இங்கு வந்துதேடிக் கொண்டிருந்தனர்.தியான மண்டபம் மிக சுத்தமாக இருந்தது...அனைத்தையும் பார்த்துவிட்டுபிரதான சாலைக்கு வந்தோம்,அங்கிருந்த டீ-க்கடையில் தேநீர் பருகினோம்,பெண்மனி தான் கடையின் நிர்வாகியாம்.பெருமையாக இருந்தது...பிச்சைகாரர்களின் ...படையெடுப்பு அதிகமாககாண முடிந்தது,பின்பு தான் புரிந்தது...டீ-தானம் திருவண்ணாமலை-யில் செய்யப்படுவதில்லை என.

பின்பு நண்பர், பேக்கரி-கடைக்கு சென்று வறிக்கி பிஸ்கட்டும்,ஒரு பை நிறைய வாழை பழமும்வாங்கி வந்தார்.நண்பரிடம் எதற்கு இவ்வளவு எனக் கேட்ட போது....அப்புறம் சொல்கிறேன் என்றார்.

மீதி அடுத்த பதிவில்....கை வலிக்கிறது....

காதலர் தினமா,கண்றாவி தினமா?

Category :

வியாபார விசயமாக 14-02- 2007 அன்று கடலூர்-லிருந்து சென்னைக்கு
கிழக்கு கடற்கரை சாலை ( ECR )வழியாக சென்றதன் தாக்கம் தான் கீழே.,


பேருந்து மாமல்லபுரத்தை தாண்டியபோது ......,இரு பக்கமும் ,இரு சக்கர வாகனங்கள்,கார்கள்,என பலப்பல .

பின்பு தான் என் மண்டைக்கு உறைத்தது,இன்று காதலர் தினம் என்று.,வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வியாபார திருவிழா.
அன்றைய தினம் அனைத்து பண்பலை வானொலி-யும் காதலை சொல்லியே வதைத்தனர்.சும்மா சொல்லக்கூடாது.....முட்டுக்காடு முதல் திருவான்மியூர் வரை சவுக்கு தோப்பெல்லாம் அவன்,அவள் தலைகள்....அவன் மேல் அவள்., அவள் மேல் அவன்.,,,கண்றாவிக் கோலங்கள்.

நாகரீக மாற்றத்தின் அவலங்கள்.,ஒழுக்கம் கூட கேலிப் பொருளானது தான் வேடிக்கை.மாறிவரும் சமுதாய அமைப்பு எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறதோ என கவலைப் படாமல் இருக்க முடியவில்லை....

"சவுக்கு தோப்பு
பக்கத்தில் கார்
ஒன்றான செருப்பூ
அவன்...அவள்
கட்டிலில் காதல்?...

முன்கதை:
சரியாக 7.00மணி,கடலூர் பேருந்து நிலையம்....சென்னை பேருந்துக்கு நின்றபோது 70வயது மதிக்கத்தக்க பாட்டி.....தம்பீ...என கூப்பிட்டு திரும்பினேன்.டீ-குடிக்க எதாவது குடுப்பா என்றார்.நல்ல உடை அணிந்திருந்தார்.....ஒன்னரை ரூபா கொடுத்து விட்டு.,
பாட்டியின் கதை கேட்டேன்.(உண்மைக் கதை)

பெயர்: மீனாட்சி அம்மாள்
ஊர்:தேவனாம்பட்டினம்(கடலூர்)
இழந்தது:வீடு,வாசல்,மகன்கள்,உறவு...
பணி:பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டுவது
இருப்பிடம்:சுப்புராயலு நகரை தாண்டி,ஒதுக்குப்புறத்தில்..ரூ300-ல் வாடகை வீடு
உடன் பிறந்தோர்: தங்கை ,,,,,,மற்றும் உறவினர் நல்ல நிலையில் உள்ளனர்
பாடம்:இளைஞர்,இளைஞி களே ஒரு வேண்டுகோள்.தயவு செய்து தாய்,தந்தையரை இப்படி ஒரு நாள் பார்க்க வைக்காதீர்.
பெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்....

கடைசி வரி:

கார் நிறுத்தக் கூட விசால இடம்.,
கட்டிப் போட பெரிய நாய்
மாளிகை மார்பிள்ஸ் வீடு
இருட்டறையில் பெற்றோரின்
விசும்பல்கள்.குரைத்தது,,,
நாய்.....

மனிதம் மறைகிறதா?????!!!!!!

Category :

இப்போதெல்லாம் செய்திகள் ஆரவாரப்படுத்தப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.குறிப்பாக '' நொய்டா'' பிஞ்சுக் கொலைகள், கணவனைக் கொல்லும் கள்ள காதலிகள்,சகோதரனை கொலை செய்யும் உடன் பிறந்தோர் என அடுக்கிச்செல்லலாம்.

காரணம் ஆயிரம் சொல்லலாம்,.மனிதனின் மாறும் வாழ்வு முறை,மிகைப் படுத்தப்படும்தொலைக்காட்சி செய்திகள்,பணம் தான் வாழ்க்கையின் அளவுகோல் என திரிக்கும் பத்திரிகைகள்.

எல்லோருக்குமே ஆசை உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்று.,இதற்கு தடை எனும் போது மனிதன் மிருகத்தை விட கேவலமான செயல்களை செய்கிறான்.

ஊடகங்கள் எப்படி சொகுசாக வாழலாம்.,குறுக்கு வழி என்ன? போன்ற தகவல்களைத்தான் நம்காதில் ஊற்றுகின்றன.விட்டுக் கொடுக்கும் குணம் மழுங்கிக் கொண்டே போகிறது.நம்முடையதொலைக்காட்சி சீரியல்கள்,ஒழுக்கமான வாழ்க்கை முறையையே கேள்விக்குறியாக்குகின்றன.
பகுத்தறிவு கொஞ்சம் கூட பயன்படுத்தப்படுவதில்லை.,படித்தவர்கள் தான் ஜோதிடம்,பெயர் மாற்றம்என சொல்லி ஊரை ஏமாற்றி,பணத்தை சுருட்டுகின்றனர்.மருத்துவர்களோ .,மனிதாபிமானத்தைமறந்து விட்டு பணம் என்ற மாயை-யில்.

இந்தியா எங்கு செல்கிறது எனத் தெளிவாக கூறமுடியவில்லை?.ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி,மறுபுறம் அடித்தட்டு மக்களின், அடிப்படை தேவை கூட பூர்த்தியாகாமை....ஆங்கில புத்தாண்டைகூட அடித்துக் கொண்டு கொண்டாடும் அவலம்.,

கடலூர் அருகே டிசம்பர் 31ஆம் தேதி நடந்த நிகழ்வு., கொடூரமானது.,
நள்ளிரவு 12.00மணிக்கு ஒரு இளைஞர் கூட்டம்,ரோட்டில் போவோரையெல்லாம் நிறுத்தி இனிப்புகொடுக்கின்றனர்.,அப்போது சக அடித்தட்டு இளைஞர் இருவர், கேலி செய்ய இனிப்பு கொடுக்கிறீர்களா? என கேட்கப் போய் கொலையில் முடிந்த கொடூரமான நிகழ்வு அது.அதன் பின் ஒரு வாரத்திற்கு அங்கு அமைதி பாழானது.

புரிந்து கொள்ளல் கூட புதிராகிப் போனது தான் கொடுமை.

கடைசி வரி:
மனிதம் புரிந்து கொள்வோம்,மனித உறவுகளை வளர்ப்போம்.

சகோதரிகளே ஒரு மார்கழி எச்சரிக்கை???

Category :

இரு தினங்களுக்கு முன் பக்கத்து தெருவில் நடந்த நிகழ்விலிருந்து,எங்கள் வீட்டை அதிகாலையிலேயே அலங்கரித்த மார்கழி கலர்''கோலம்'' ,இப்போது அலங்கோலமாகிவிட்டது.

அதிகாலை சுமார் 5 மணிக்கு பக்கத்து தெருவில் இருக்கும் (எங்களுக்கு பழக்கமானவர்)கல்யாணமான பெண்மணி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது ஒரு ரோமியோசர்,புர் என்று மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளான்.சிறிது நேரம் கழித்து வண்டியில்வட்டமடித்தவன்,கோலத்தின் மேல் ஏற்றி,மிக அருகில் வந்து.,ஏதோ செய்ய முயன்றவனை,சுதாரித்து கொண்டு பக்கத்தி இருந்த தொடப்பத்தினால்(விளக்குமாரு) விளாசி இருக்கிறார்.,பயந்துபோனவன்.,உதையை தாங்கும் ஆண்மையின்றி ஓட்டம் பிடித்திருக்கிறான்.பின்பு சத்தம் கேட்டுஅனைவரும் போன போது இந்த கதையை விவரித்தார் அந்த வீர பெண்மணி.அவர் புதுச்சேரியில்(பாண்டிச்சேரி) ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.தைரியத்தை பாராட்டி விட்டு வந்தோம்.

ஆனால் அடுத்த நாள் அதிகாலையில் என் மனைவி,என்னையும் எழுப்பினார்.,அவ்வளவு தைரியம் என்மனைவிக்கு!!!,கோலம் போடும் வரை காவலுக்கு நான்.,,,மார்கழி....எப்போது கழியுமோ என??????

சகோதரிகளே,காவலுக்கு ஆள் இல்லையென்றால் நல்ல கழி அல்லது வாட்டமான கற்களை பக்கத்தில்வைத்துக் கொள்ளுங்கள்.மேலே கண்ட ஆயுதங்களை பயன்படுத்த தயக்கம் எனில்,எடுங்கள் மிளகாய் பொடி,கலர் கோல மாவு மாதிரி இருக்கும்.இதை வைத்து ஒரு படையையே சமாளிக்களாம்.

எவனாவது விளையாட வந்தால் அவன் விதியை மாற்றுங்கள்.

கடைசி வரி:
சென்னை பெண்களுக்கு இந்த ''டிப்ஸ்''பயன்படாது.,ஏனெனில் அவர்கள் அடுக்கு மாடிகுடியிருப்பில் இருந்து கொண்டு ''சீரியல் கோலங்கள்'' மட்டுமே பார்ப்பதால்.....!!!

6ம்,8ம் குப்பையை பொறுக்கி.....?

Category :

போன வாரம் மதியம் சாப்பிட்டு கொண்டிருந்த போது அம்மா...மா......என
குரல் கேட்டபோது,பிச்சை கேட்கிறார்களோ என என் மனைவி
வெளியில் சென்று பார்த்தார்.பின்பு தண்ணீர் கேட்கிறார்கள் ,பேப்பர்
பொறுக்கற சின்ன பசங்க என எங்களிடம் சொல்லி விட்டு ஒரு பாட்டிலில்
கொண்டு சென்றார்.

திரும்பிய போது ரொம்ப சின்ன பசங்கங்க.. என சொன்னார்.,அப்படியே
அவசரமாக வாசலில் சென்று பார்த்து அதிர்ந்தேன்.
பெரியவனுக்கு 8வயது,சின்னவனுக்கு 6வயதும் இருக்கும்.புத்தகம் படிக்கும்
வயசில்,அதனுள் இருக்கும் காகிதத்தை பொறுக்கும் அவலம்.,

இருவரையும் அருகே அழைத்தேன்.,அச்சத்துடன் நெறுங்கி வந்தனர்.பள்ளிக்கூடம்
போவலையா என்றேன்.,இல்ல என்று சிறியவன் தான் பதில் சொன்னான்.ஏன்? என்றேன்.,அப்பா,
அம்மா நிறுத்திட்டாங்க......

உன் பெயர் என்ன என்று பெரியவனிடம் கேட்டேன்.,சங்கீதா என பெண் குரல் கேட்டு மீண்டும்
அதிர்ந்தேன்.ஆமாம்,கிராப் வெட்டிய தலை,கால் சட்டை,மேல் சட்டை என.....உன் பெயர் என்ன
என்று சின்ன பையனிடம் கேட்டேன்.,அரவிந் என அழகாக சொன்னான்., என்ன பாவம் செய்தனர்
இந்த இளம் தளிர்கள்.,

பெற்றவர்களே இந்த கொடுமையை செய்யும் போது,சட்டமெல்லாம் என்ன செய்யும்.அப்பா,என்ன வேலை செய்யறார் என்றேன்.?,கூலி வேலை என்றனர்.,அம்மா-வும் கூலி வேலை செய்யறாங்க என்றனர்.

எத்தனையாவது வரைக்கும் படிச்சீங்க என்றேன்.,ரெண்டாவது என்றனர்.,யார் பேப்பர் பொறுக்க
சொன்னது என்றேன்.,அப்பா தான் என்றனர்.,வீடு எங்கே என்றபோது கேப்பர் மலைக்கு பக்கத்தில்
என கூறினர்.சிறுவன் போலான்கா....என அக்காவை அழைத்தான்., நான் சாப்பிடறீங்களா எனக்
கேட்டும் மறுத்துவிட்டனர்.

கடைசியாக ஒரு நாளைக்கு எவ்ளோ சம்பாதிக்கறீங்க என்றேன்.,இருவது முதல் அம்பது ரூபா
என்றனர்,

அதற்கு மேலும் அவர்களுக்கு பொறுமை இல்லாமல்,அவரவர் சாக்குகளை தூக்கிக்கொண்டு
நடந்தனர்.

நான் அவர்களை பார்த்துக்கொண்டே இருந்தேன்,எங்கள் தெருவை கடக்கும் வரை. அன்றைய தினம்
என் மனதின் பாரம் குறைய வெகு நேரம் ஆகியது.அடுத்த முறை அவர்களைக் கண்டு ஏதாவது
செய்ய ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

கடைசி வரி:
அந்த இளந் தளிர்கள் இன்னும் என் கண்ணில் அகப்படவில்லை.,,,,,,அடுத்த நாள்
குழந்தைகள் தினம்.,
பள்ளிகளில் கொண்டாட்டம்.,,இந்த தளிர்கள் எந்த ஊரில் பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தார்களோ?....

நண்பனா? மனைவியா??..ஏன் இந்த முடிவு???

Category :

ஒரு வருத்தம் தரும் கடந்த வார நிகழ்வு,.

இரு இனைபிரியா கேரள நண்பர்கள்,ஜாபர் அலி மற்றும் சந்தோஷ்(27).கடந்த ஒன்பது வருடங்களாக ஒரே செருப்பு கடையில் பணி,இதன் மூலம் நட்பு இறுக்கமானது.பொருளாதார உயர்வுக்கு என போனவாரம் சந்தோஷ்
ஷார்ஜா(Sharjah)சென்றார்,வேலை கிடைத்து அல்ல.வேலை தேட.
பொதுவாகவே மலையாளிகள் வேலை தேட துபாய் போவது என்பது சாதாரணம்.இப்பொது விமான டிக்கட்டும் மலிவான விலையில்
கிடைப்பதால் "விசிட் விசா"வில் வேலை தேடும் படலம் .

சந்தோஷ் ஷார்ஜா வந்த இரு தினங்களில் ,ஜாபர் அலி நண்பன் சந்தோஷ்-இன் பிரிவினால் துயரப்பட்டு ,மன இறுக்கத்தினால் மாரடைப்பினால் மரணம் அடைகிறார்.இத்துயரச் செய்தியை மற்ற நண்பர்கள் சந்தோஷ்-க்கு தெரிவிக்க அதிர்ச்சியடைகிறார்.உடனே நாடு போகவேண்டும் என ஷார்ஜா-வில்
ரூமில் உடன் தங்கியோரிடம் தெரிவிக்கிறார்.அவர்கள் சமாதானப்படுத்தி,
இப்போது தான் நிறைய செலவு செய்து வந்துள்ளாய்.,இன்னும் வேலை கூட கிடைக்கவில்லை என்று கூறி உண்மையை புரிய வைக்கின்றனர்.

ஆனால் மனம் கேட்காமல்,இரவைக் கூட தள்ள இயலாமல் ,தூக்கில் தொங்கிவிடுகிறார்.
ஒரு நண்பனின் நட்பு மரணத்திலும் தொடர்கிறது. கொஞ்சம் யோசனை செய்திருந்தால் சந்தோஷ் இன்று வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

இதில் கொடுமையான துயரம் என்னவெனில் தன் மனைவியையும்,ஒன்பது மாத குழந்தையையும் அநியாயமாய் கடைசி நேரத்தில் கூட மறந்தது.பாவம் ஜெயஷ்ரி(சந்தோஷ் மனைவி),தற்போது ஒன்பது மாத குழந்தையுடன்...(கணவனின் உயிரற்ற உடலுக்காக.,காத்துக் கொண்டு)



கடைசி வரி:
  • இந்த மாதிரி அனாவசிய தற்கொலைகள் இப்போது துபாயில் அதிமாகிவருகிறது.சிறு ஏமாற்றத்தை கூட தாங்க இயலாத ஒரு அவல வாழ்க்கை முறையை இப்பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படுத்திவிட்டதோ எனக் கவலை கொள்ளவேண்டி உள்ளது.
  • குறைந்தது மாதத்தில் 20 தற்கொலைகள் நிகழ்கின்றன,அதிகமானோர் மலையாளிகளே!
நன்றி:காமுதிஆன்லைன்,கேரளா மற்றும் கலீஜ் டைம்ஸ்

சிக்-குன் -குனியாவும்,சின்ன பொண்ணு ஆயாவும்!

Category :

பெயர்:சின்ன பொண்ணு
ஊர்:கடலூர்
உறவு:ஆயா(அம்மாவின் அம்மா)
வயது:80+
தற்போது:தனியார் மருத்துவமனையில்
காரணம்:சிக்-குன் -குனியா

சாதாரண காய்ச்சல் என்றுதான் ஆயாவை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்து சென்றார்,அம்மா.மருத்துவர் மருந்து,மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டார்.
பின்னர் இரண்டு நாட்கள் மருந்து,சாப்பிட்டும் ஒன்னும் முன்னேற்றம் தெரியாததால்,மீண்டும் படையெடுத்தார்கள்,மருத்துவரை நோக்கி.,

இப்போது மருத்துவர் சொன்னது,சிக்குன் குனியா என்று.பத்து நாட்களுக்கு இப்படித்தான் சுரமும்,மூட்டு வலியும் இருக்கும் என்றார்.
ஆயாவினால் நிற்க கூட முடியாமல்,அம்மா மற்றும் என் துணைவி உதவி கொண்டு தான்,"ஒன்னுக்கும்,ரெண்டுக்கும்" போனார்கள்.

இரவில் ஒரே சத்தம்,பினாத்தல்,ஆயாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அடுத்த இரண்டு நாட்களில் கால்கள் ரொம்ப வீங்கிவிட்டன.மருத்துவரிடம் போனபோது,பெரிய
மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள் என கூறிவிட்டார்.

பின்னர் கடலூரில் புகழ்பெற்ற மருத்துவமனையில் சேர்த்து,இன்றுடன் ஏழு நாட்கள் ஆகின்றன.இன்னமும் ஆயாவினால் பழய நிலைக்கு வர இயலவில்லை.

சுரம் விட்டு,விட்டு வருகிறது,அதனால் மருத்துமனையில் இருக்க வேண்டிய கட்டாயம்.அதிகாரம் செய்து கொண்டிருந்த ஆயா இப்போது அடங்கி ,ஒடுங்கிப் போய்.....

"ஆறு பேர் உள்ள வீட்டில்,ஆயாவை மட்டும் ஏன் கடித்தது அந்த கொசு?".யாராவது,மருத்துவ ஜீவிகள் பதில் சொல்வீர்களா?

கடைசி வரி:
சிக்-குன் -குனியா பற்றி
"Chikungunya fever is a viral disease transmitted to humans by the bite of infected mosquitoes. Chikungunya virus (CHIKV) is a member of the genus Alphavirus,in the family Togaviridae. CHIKV was first isolate
from the blood of a febrile
patient in Tanzania in 1953, and has since been identified repeatedly in west,central and southern Africa and many areas
of Asia, and has been cited as
the cause of numerous human epidemics
in those areas since that time.

The virus circulates throughout much of Africa, with transmission thought
to occur mainly between mosquitoes and monkeys."