6ம்,8ம் குப்பையை பொறுக்கி.....?

Category :

போன வாரம் மதியம் சாப்பிட்டு கொண்டிருந்த போது அம்மா...மா......என
குரல் கேட்டபோது,பிச்சை கேட்கிறார்களோ என என் மனைவி
வெளியில் சென்று பார்த்தார்.பின்பு தண்ணீர் கேட்கிறார்கள் ,பேப்பர்
பொறுக்கற சின்ன பசங்க என எங்களிடம் சொல்லி விட்டு ஒரு பாட்டிலில்
கொண்டு சென்றார்.

திரும்பிய போது ரொம்ப சின்ன பசங்கங்க.. என சொன்னார்.,அப்படியே
அவசரமாக வாசலில் சென்று பார்த்து அதிர்ந்தேன்.
பெரியவனுக்கு 8வயது,சின்னவனுக்கு 6வயதும் இருக்கும்.புத்தகம் படிக்கும்
வயசில்,அதனுள் இருக்கும் காகிதத்தை பொறுக்கும் அவலம்.,

இருவரையும் அருகே அழைத்தேன்.,அச்சத்துடன் நெறுங்கி வந்தனர்.பள்ளிக்கூடம்
போவலையா என்றேன்.,இல்ல என்று சிறியவன் தான் பதில் சொன்னான்.ஏன்? என்றேன்.,அப்பா,
அம்மா நிறுத்திட்டாங்க......

உன் பெயர் என்ன என்று பெரியவனிடம் கேட்டேன்.,சங்கீதா என பெண் குரல் கேட்டு மீண்டும்
அதிர்ந்தேன்.ஆமாம்,கிராப் வெட்டிய தலை,கால் சட்டை,மேல் சட்டை என.....உன் பெயர் என்ன
என்று சின்ன பையனிடம் கேட்டேன்.,அரவிந் என அழகாக சொன்னான்., என்ன பாவம் செய்தனர்
இந்த இளம் தளிர்கள்.,

பெற்றவர்களே இந்த கொடுமையை செய்யும் போது,சட்டமெல்லாம் என்ன செய்யும்.அப்பா,என்ன வேலை செய்யறார் என்றேன்.?,கூலி வேலை என்றனர்.,அம்மா-வும் கூலி வேலை செய்யறாங்க என்றனர்.

எத்தனையாவது வரைக்கும் படிச்சீங்க என்றேன்.,ரெண்டாவது என்றனர்.,யார் பேப்பர் பொறுக்க
சொன்னது என்றேன்.,அப்பா தான் என்றனர்.,வீடு எங்கே என்றபோது கேப்பர் மலைக்கு பக்கத்தில்
என கூறினர்.சிறுவன் போலான்கா....என அக்காவை அழைத்தான்., நான் சாப்பிடறீங்களா எனக்
கேட்டும் மறுத்துவிட்டனர்.

கடைசியாக ஒரு நாளைக்கு எவ்ளோ சம்பாதிக்கறீங்க என்றேன்.,இருவது முதல் அம்பது ரூபா
என்றனர்,

அதற்கு மேலும் அவர்களுக்கு பொறுமை இல்லாமல்,அவரவர் சாக்குகளை தூக்கிக்கொண்டு
நடந்தனர்.

நான் அவர்களை பார்த்துக்கொண்டே இருந்தேன்,எங்கள் தெருவை கடக்கும் வரை. அன்றைய தினம்
என் மனதின் பாரம் குறைய வெகு நேரம் ஆகியது.அடுத்த முறை அவர்களைக் கண்டு ஏதாவது
செய்ய ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

கடைசி வரி:
அந்த இளந் தளிர்கள் இன்னும் என் கண்ணில் அகப்படவில்லை.,,,,,,அடுத்த நாள்
குழந்தைகள் தினம்.,
பள்ளிகளில் கொண்டாட்டம்.,,இந்த தளிர்கள் எந்த ஊரில் பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தார்களோ?....

நண்பனா? மனைவியா??..ஏன் இந்த முடிவு???

Category :

ஒரு வருத்தம் தரும் கடந்த வார நிகழ்வு,.

இரு இனைபிரியா கேரள நண்பர்கள்,ஜாபர் அலி மற்றும் சந்தோஷ்(27).கடந்த ஒன்பது வருடங்களாக ஒரே செருப்பு கடையில் பணி,இதன் மூலம் நட்பு இறுக்கமானது.பொருளாதார உயர்வுக்கு என போனவாரம் சந்தோஷ்
ஷார்ஜா(Sharjah)சென்றார்,வேலை கிடைத்து அல்ல.வேலை தேட.
பொதுவாகவே மலையாளிகள் வேலை தேட துபாய் போவது என்பது சாதாரணம்.இப்பொது விமான டிக்கட்டும் மலிவான விலையில்
கிடைப்பதால் "விசிட் விசா"வில் வேலை தேடும் படலம் .

சந்தோஷ் ஷார்ஜா வந்த இரு தினங்களில் ,ஜாபர் அலி நண்பன் சந்தோஷ்-இன் பிரிவினால் துயரப்பட்டு ,மன இறுக்கத்தினால் மாரடைப்பினால் மரணம் அடைகிறார்.இத்துயரச் செய்தியை மற்ற நண்பர்கள் சந்தோஷ்-க்கு தெரிவிக்க அதிர்ச்சியடைகிறார்.உடனே நாடு போகவேண்டும் என ஷார்ஜா-வில்
ரூமில் உடன் தங்கியோரிடம் தெரிவிக்கிறார்.அவர்கள் சமாதானப்படுத்தி,
இப்போது தான் நிறைய செலவு செய்து வந்துள்ளாய்.,இன்னும் வேலை கூட கிடைக்கவில்லை என்று கூறி உண்மையை புரிய வைக்கின்றனர்.

ஆனால் மனம் கேட்காமல்,இரவைக் கூட தள்ள இயலாமல் ,தூக்கில் தொங்கிவிடுகிறார்.
ஒரு நண்பனின் நட்பு மரணத்திலும் தொடர்கிறது. கொஞ்சம் யோசனை செய்திருந்தால் சந்தோஷ் இன்று வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

இதில் கொடுமையான துயரம் என்னவெனில் தன் மனைவியையும்,ஒன்பது மாத குழந்தையையும் அநியாயமாய் கடைசி நேரத்தில் கூட மறந்தது.பாவம் ஜெயஷ்ரி(சந்தோஷ் மனைவி),தற்போது ஒன்பது மாத குழந்தையுடன்...(கணவனின் உயிரற்ற உடலுக்காக.,காத்துக் கொண்டு)



கடைசி வரி:
  • இந்த மாதிரி அனாவசிய தற்கொலைகள் இப்போது துபாயில் அதிமாகிவருகிறது.சிறு ஏமாற்றத்தை கூட தாங்க இயலாத ஒரு அவல வாழ்க்கை முறையை இப்பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படுத்திவிட்டதோ எனக் கவலை கொள்ளவேண்டி உள்ளது.
  • குறைந்தது மாதத்தில் 20 தற்கொலைகள் நிகழ்கின்றன,அதிகமானோர் மலையாளிகளே!
நன்றி:காமுதிஆன்லைன்,கேரளா மற்றும் கலீஜ் டைம்ஸ்

சிக்-குன் -குனியாவும்,சின்ன பொண்ணு ஆயாவும்!

Category :

பெயர்:சின்ன பொண்ணு
ஊர்:கடலூர்
உறவு:ஆயா(அம்மாவின் அம்மா)
வயது:80+
தற்போது:தனியார் மருத்துவமனையில்
காரணம்:சிக்-குன் -குனியா

சாதாரண காய்ச்சல் என்றுதான் ஆயாவை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்து சென்றார்,அம்மா.மருத்துவர் மருந்து,மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டார்.
பின்னர் இரண்டு நாட்கள் மருந்து,சாப்பிட்டும் ஒன்னும் முன்னேற்றம் தெரியாததால்,மீண்டும் படையெடுத்தார்கள்,மருத்துவரை நோக்கி.,

இப்போது மருத்துவர் சொன்னது,சிக்குன் குனியா என்று.பத்து நாட்களுக்கு இப்படித்தான் சுரமும்,மூட்டு வலியும் இருக்கும் என்றார்.
ஆயாவினால் நிற்க கூட முடியாமல்,அம்மா மற்றும் என் துணைவி உதவி கொண்டு தான்,"ஒன்னுக்கும்,ரெண்டுக்கும்" போனார்கள்.

இரவில் ஒரே சத்தம்,பினாத்தல்,ஆயாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அடுத்த இரண்டு நாட்களில் கால்கள் ரொம்ப வீங்கிவிட்டன.மருத்துவரிடம் போனபோது,பெரிய
மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள் என கூறிவிட்டார்.

பின்னர் கடலூரில் புகழ்பெற்ற மருத்துவமனையில் சேர்த்து,இன்றுடன் ஏழு நாட்கள் ஆகின்றன.இன்னமும் ஆயாவினால் பழய நிலைக்கு வர இயலவில்லை.

சுரம் விட்டு,விட்டு வருகிறது,அதனால் மருத்துமனையில் இருக்க வேண்டிய கட்டாயம்.அதிகாரம் செய்து கொண்டிருந்த ஆயா இப்போது அடங்கி ,ஒடுங்கிப் போய்.....

"ஆறு பேர் உள்ள வீட்டில்,ஆயாவை மட்டும் ஏன் கடித்தது அந்த கொசு?".யாராவது,மருத்துவ ஜீவிகள் பதில் சொல்வீர்களா?

கடைசி வரி:
சிக்-குன் -குனியா பற்றி
"Chikungunya fever is a viral disease transmitted to humans by the bite of infected mosquitoes. Chikungunya virus (CHIKV) is a member of the genus Alphavirus,in the family Togaviridae. CHIKV was first isolate
from the blood of a febrile
patient in Tanzania in 1953, and has since been identified repeatedly in west,central and southern Africa and many areas
of Asia, and has been cited as
the cause of numerous human epidemics
in those areas since that time.

The virus circulates throughout much of Africa, with transmission thought
to occur mainly between mosquitoes and monkeys."

சென்னையில் நடந்த வலைப்பதிவர் மாநாடு!

Category :


சென்ற வாரம் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் எத்தனை தமிழ் வலைப்பதிவர்கள் கலந்து கொண்டனர்.ஏன் இது பற்றிய விரிவான செய்தி தமிழ்மணத்தில் யாரும் போடவில்லை? இதை இனைந்து நடத்தியது யாகூ இந்தியாவாமே?நேற்று தற்செயலாய் பிபிசி தமிழ் இணையத்தை பார்த்த போது தான்,இது பற்றிய செய்தி தெரியவந்தது. யாராவது கலந்து கொண்டவர்கள் ,விரிவான பதிவை போடலாமே? ஆர்வமுடன் காத்திருக்கிறேன். -முகு-

குறிப்பு:
இந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தகவல்:BBC Tamil

பாவப்பட்ட மந்திரி,ஆஸ்கர் பெர்ணான்டஸ்!

Category :



எந்த இலாகாவும் இல்லாமல், ஒரு நல்ல மத்திய மந்திரி நீண்ட
காலமாக மத்திய அரசில் இருக்கிறார்.ஏன் என்று புரியவில்லை?

நம் பிரதம மந்திரியும்,சோனியா அம்மையாரும் ஏன் இதுவரை ஒரு இலாகா கூட
ஒதுக்காமல் உள்ளனர் என்றும் புரியவில்லை.

அந்த மந்திரி என்ன வேலை செய்து,சம்பளம் பெறுகிறார்?யாராவது விளக்குங்களேன்?அவராலுமும் சுய மரியாதை இல்லாமல்,சும்மாவே எப்படி இருக்க முடிகிறது?

அரசியலில் இதெல்லாம்,சகஜம் என்றாலும் ஏன் யாரும் கேட்கவில்லை?
அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?யாராவது பதில் சொல்லுங்கள்!

இதில் என்ன கொடுமை என்றால் சில மந்திரிகள் இன்னமும் நாலைந்து துறைகளை
சுமந்து கொண்டு ஒன்னும் செய்யாமல் உலாவுவது!

அன்புடன்,
முகு

கொலைகாரிகளாவது ஏன்?

Category :


மன்னிக்கவும்,இந்த சொல்லை பயன்படுத்தியமைக்கு,நம்முடைய சில சகோதரிகளின் செயல் தான் இப்படி எழுதத் தூண்டியது.

"கொலையும் செய்வாள் பத்தினி"- பழமொழி; இப்பொது,காதலனுக்காக
(அப்பாவி) கணவனையே கொல்கிறார்கள்.

கள்ள காதலனுக்காக,கல்யாணம் செய்த சில நாட்களிலேயே அப்பாவி கணவனைக் கொன்றது.கள்ள காதலனுக்காக,பெற்ற தாயையே கொன்றது;
கள்ள காதலனுக்காக,மாமியாரையே கொன்றது.இந்த கேவலங்கள் எல்லாம்,தமிழ் நாட்டில் தான்(ஜுன் மற்றும் ஜுலை 2006-யில்) அரங்கேறி உள்ளன.

இதற்கெல்லாம் ஒரு வரியில் பதில் சொல்லலாம்.,நடுத்தர மக்களின் பொருளாதார,சமூக மாற்றங்கள் தான்.இன்றைய குழந்தைகள் தகவல்,தொழில்நுட்ப, அறிவியல் புரட்சி-யினால் புத்திசாலிகளாகவே பிறக்கிறார்கள்.தொலைக்காட்சி ஊடகங்கள் தான் மக்களை சிந்திக்கவும்,சிதைக்கவும் செய்ய துணைபுரிகின்றன.

இன்றைய காலகட்டத்தில் வயதுக்கு வந்த இளைஞர்,இளைஞிகளை நெறிப்படுத்துவதில் பெற்றோரின் பங்கு மிக அதிகம்.கல்லூரி செல்லும் பருவம் வந்தவுடன் பிள்ளைகளிடம் மனம் திறந்து பேசவென்டும்.காதல்,காமம் பற்றிய தகவல்களைக் கூட பறிமாறிக்கொள்ளலாம்,குறை நிறைகளை பேசலாம்.

கல்யாணம் ஆன பிறகு,கணவனும் மனைவின் மனதைப் புரிந்து கொண்டு,இல்லறத்தில் சமபங்கு கொடுக்க வேண்டும்.காமம் என்பது பொதுவானது,அதை இரு பாலரும் உணர்ந்து,வாழ்க்கையை இனிமையாக்க வேண்டும்.நிறைய பெண்கள் தடம் மாறுவது,கணவன்,
மனைவியின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாததே காரணம்.
அதனால் தான் தற்போதைய ஒழுக்க சீர்கேடுகள்.

பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
பெற்றோர் தவறு செய்து கொண்டு,பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக
வளர்க்க முயல்வது கேலிக்குறிய செயல் தான்.

அதேமாதிரிதான் ஊரெல்லாம்,மேய்ந்து கொண்டு வீட்டில் உள்ளவள்
மட்டும்,உத்தமியாய் வாழ உதைத்து கொடுமைப்படுத்துவதும்,தடையை
மீறத்தான் வழி வகுக்கும்.

ஆண்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்,பெண்கள் இப்பொது பொருளாதாரத்தில் முன்னேறியும்,தற்சார்பும் பெற்று விட்டார்கள்.அதனால் ஏமாற்றவோ,ஏதேச்சிகாரம் செய்யவோ முடியாது.

புரிந்து கொண்டு வாழ்வோம்.(அடுத்தவர் மனைவியுடனோ அல்லது அடுத்தவர் கணவனுடனோ அல்ல!)

கடைசி வரி:

வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்'பூ''
அதை அன்பால் மட்டுமே நுகரமுடியும்!

இனிய நண்பன் செந்திலின் கடலூர் வருகை!

Category :

ஜுலை 08,2006 அன்று என் இனிய நண்பன் செந்தில் ,அவர் துணைவி அருணா மற்றும் இவர்களின் புதல்வி ராஜி மதியம் சுமார் 2.00 மணி அளவில் வந்திறங்கினர் வீட்டின் முன்.,
அளவில்லா மகிழ்ச்சி எங்களுக்கு;போன வருடமே வந்திருக்க வேண்டும்., தாமதமான வருகை எனினும் மிகுந்த மகிழ்ச்சி என் துணைவிக்கு.

எல்லோரும் சாப்பிட்டு கதை.,கதையாய் நிறைய விசயங்கள் பேசினோம்.,பின்பு இரண்டு மணி நேர ஒய்வுக்கு பிறகு கடலூர் கடற்கரைக்கு(பீச்) சென்றோம்.,
கடலில் காலை நனைத்துவிட்டு,ஒரு இடத்தில் அமர்ந்தோம்.
முகிலும்,ராஜியும் நன்கு ஒட்டிக் கொண்டனர்.,எங்களைச் சுற்றி,சுற்றி ஒடி அமர்க்களம் செய்தனர்.பின்பு மிளகாய் பஜ்ஜி,அய்ஸ்கிறீம்., என சாப்பிட்டு., குடும்ப நிகழ்வுகளை பேசினோம்.இடையில் அருணாவும்,எழிலும் பேசிக்கொண்டனர்.,யாரைப் பற்றி பேசப் போறாங்க???தெரிந்தது தானே!

எட்டு மணிக்கு ஆட்டோவில் நேராக கடலூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆனந்த பவனுக்கு சாப்பிட இறங்கிக் கொண்டோம்.உள்ளே நல்ல கூட்டம்., அதனால் குளிர் அறைக்குச் சென்றோம்.,பிடித்தமானவற்றை உபசரிப்பாளரிடம் சொன்னோம்.,ராஜி யின் அழகுத் தமிழ் பேச்சு ,அனைவரையும் கவர்ந்தது.,பக்கத்தில் அமர்ந்து உண்டவர்களும் ரசித்தனர்.உணவும் அருமையாக இருந்தது.,

அங்கிருந்து ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.00.,விருந்தினர்
மாடியில் தூங்கினர்.,

காலையில் அப்பா ,கடலூர் ஒ.டி க்கு மீன்,இறால் வாங்க சென்றார்.,நான் 7.00மணி வாக்கில் நல்ல கோழி வாங்க வண்டிப்பாளையம் ரோட்டுக்கு சென்றேன்.,காலையிலேயே மதிய விருந்துக்கு எழிலும்,அம்மாவும் தயாராயினர்.காலை சிற்றுண்டி முடித்துவிட்டு கோயிலுக்கு கிளம்ப தயாரானோம்.நான் அப்பா ஏக்சல் -யை எடுத்து கொண்டேன்,செந்தில் என் வண்டி-"யமகா"வை(என் துணைவி மொழியில் "கட்டை வண்டி")உதைத்த பின் அவர் மனைவி மற்றும் ராஜி ஏறிக்கொண்டனர்.

நான் வழிகாட்டியாக முன்னே சென்றேன்.,முதலில் பாடலீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம்.,பின்பு திருவந்திபுரம் சென்று தேவநாத பெருமாளை பார்த்தோம்.,கோயிலை விட்டு வரும் போது மணி 12.00.,கொடுமையான வெயில்.,

நல்ல படியாக வீடு வந்து சேர்ந்தோம்.,வீட்டில் நுழைந்தவுடன் ஒரே வாசம்,அருணா ,எழிலுடன் சேர்ந்து சமையலில் இறங்கினார்.நாங்கள் போன வருடம் தஞ்சாவூர் சென்ற போது அறுசுவை விருந்து படைத்தவர் அருணா.

சரியாக இரண்டு மணியளவில் சாப்பிட்டோம்.,அருமையாக சமைத்திருந்தனர்.,(அம்மா,எழில் மற்றும் அருணா-வுக்கு நன்றி)சாப்பிட்டு சிறு தூக்கம் போட்டோம்.,
நான்கு மணிக்கு தஞ்சை செல்ல புறப்பட்டனர்., நானும்,முகிலும் பேருந்து நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தோம்.

ராஜி கையாட்டிக் கொண்டிருக்கும் போதே பேருந்து புறப்பட்டது.

இனிமையான இரண்டு நாட்கள்,இனிமையான மனிதர்களால் மனதில் இடம் பிடித்தது.