இனமான பேராசிரியர் மறைந்தார்!

Category : , ,

  • கடைமை
  • கண்ணியம்
  • கட்டுப்பாடு
தி.மு. வின் தூண் சரிந்துவிட்டது.
தமிழகத்தின் ஓர் அற்புதமான மனிதன்நல்ல பேச்சாளர்திறமையான நிர்வாகி இன்று இல்லை.

கட்சிக்கு உண்மையாக பணியாற்றியவர்மரியாதையுடன் பழகியவர்கலைஞரின் இதயமாகசெயல்பட்டவர்.

என் அபிமான பேச்சாளர்அவர் கடலூர் வரும்போதெல்லாம் அவரின் மேடைப்பேச்சை தவறாமல்கேட்டு ரசித்தவன்.

இனமான பேராசிரியரின் பங்களிப்பை தமிழகம் என்றும் மறக்காது.

Information vs Knowledge

Category :

In this digital age, knowledge and information are playing vital role.

To verify an information itself is not an easy job as many falls under fake with no authenticity.

On the other hand, Knowledge is a pillar for anyone but choosing the right one is challenging. You should practice and learn it over the years for excellence.

Key differences:

Information 
 Knowledge 
Static 
Dynamic 
Unproven
Proven
Tool
Asset

Digitalization towards Industry 4.0

Category :

I am glad to have been invited to a round table discussion at Bentley Academy, Dubai & co-sponsored by Reliabilityweb to discuss on digitization, Artificial Intelligence , Machine learning & IiOT.

Many delegates from around the world attended and shared their insights on digitalization in Industry and especially Asset Management.

Key obstruction for transition to 4.0 are people and process. Unless strong foundation is laid, any digitalization will fail without any results. IT is enabler for easy transition and it cannot  solve inherent and design issues.

Hence key challenges to be dealt with people and people. Without  people support any change in process will fail and it will go to trash.

வடமலை ‍= தன்னம்பிக்கை நாயகன்

Category :

ஆம்.இன்று (16-03-2019) நம்மிடமிருந்து பிரிந்துவிட்டார், ஆனால் அவரின்
நினைவுகள் என்றென்றும் நம்மிள் உயிர் வாழும்.

உழைப்பின் இலக்கணம் அவர்...தேனீ போல் உழைப்பவர்,உழைத்தவர். ஆம், அவர் என்னுள்ளும் கிரியா ஊக்கியாய் ....இளையோருக்கு பாடமாய்....

அவர் அதிகாலையில் 4.00மணிக்கு தன் "சைக்கிள்" ல் வித்தியாசமான் மணியுடன் கூத்தப்பாக்கம் மெயின் ரோட்டில் அனைவரையும் எழுப்பிவிடுவார்...அந்த சைக்கிள் தேவனாம்பட்டினம் கடற்கரை சென்று திரும்பும். அப்போதே என்னுடன் பேசும்போது நம்பிக்கை விதைகளை விதைத்தவர் அவர்.

1980 களில் அவர் கடலூர் "செல்லமய்யர் துணிக்கடை"யின் நாயகன் அவர். முதலாளிக்கு எல்லாமாக இருந்தவர்...அவ்வளவு விசுவாசி.
வியாபாரத்தை வித்தியாசமாக செய்தவர். பின்னர் கால சுழற்சியால், துணி வியாபாரம் படுத்தவுடன், "பாண்டியன் டயர்ஸ்" ல் சேர்ந்து ஊர் , ஊராய் சுற்றினார்... டயர் ரீட்ரெட் வியாபாரம் செய்ய....பெரிய டயர்களை கூட அசால்டாக உருட்டிச் செல்வார்.

அங்கும் உழைப்பு, உழைப்பு...முதலாளிக்கு நல்ல லாபம் ஈட்டித்தந்தார்.

பின்னர் உடல் நலன் குன்றி, வீட்டிலேயே அடைபட்டு இருக்க வேண்டிய‌ நிலையிலும், நம்பிக்கையால் வெற்றி கண்டவர்.

போன வருடம் விடுமுறை‍யில், அவர் வீட்டுக்கு சென்று பேசிய நிகழ்வு இன்னும் என் நெஞ்சில்...

அவர் மறையவில்லை...நம்பிக்கைகள் அழிவதில்லை.வடமலை , ஓர் மாமனிதன். அவர் என்றும் வாழ்வார்.

நட்புக் கூட்டம்‍-2018

Category :

30 வருடங்களுக்கு பிறகு  நண்பர்கள் சந்திப்பு நேற்று (30-12-2018) கடலூர்‍- ல்
நடந்தேறியது. சுமார் 22 கல்லூரி நண்பர்கள் கலந்து கொண்டனர்.

நான் பாலைவன தேசத்தில் பணிபுரிவதால் கலந்து கொள்ள இயலவில்லை.
மற்ற நண்பர்கள் வெகு தூரத்தில் இருந்தும் வந்திருந்தனர்.

நெகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் உரையாடல்கள்...இருக்காதா பின்னே, 30
வருடம் கொஞ்ச காலமல்ல...

சில மாதங்களுக்கு முன் தான் புதுப்பிக்கப்பட்ட உறவு அது, ஆனால் அதன்
வலிமை நேற்று தான் தெரிந்தது.

நட்பு " உறவினை" விட மீண்டும் புரிந்தது. நிறைய நண்பர்கள் டாக்டர், எஞ்சினியர்,அரசுப்பணி,தொழிலதிபர் என பலப்பல...

நண்பேன்டா....!!!

திரும்பிக் பார்க்கிறேன் 2015?

Category :


365 நாட்கள் ஓடி விட்டன. நாளை புது வருடம் ஆரம்பமாகிறது.
இந்த ஒரு வருடத்தில் நான் என்ன செய்தேன், சாதித்தேன் எனத்
தேடுகிறேன்.

குடும்பம், உறவுகள் மற்றும் நண்பர்கள் என்ற வட்டத்தில் நான் சுற்றி வந்துள்ளது புரிகிறது.
டாஸ்மாக், வெள்ளம் மற்றும் கடைசியாக “த்தூ” வரை ஒடி விட்டது.
சமுதாயத்திற்கு என்ன செய்தேன் என்ற கேள்விக்கு விடை இல்லை.
ஒரு சில ஆயிரம் வெள்ள நிதி கொடுத்ததை மீறி சொல்லிக்கொள்வதற்க்கு
ஒன்றும் இல்லை.


2016-ஆம் ஆண்டில் சாதாரணத்தை மீறி சாதிக்க வேண்டும்.(எதையாவது)

கடலூரின் 20,000 கோடி கனவு - நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேசன்?

Category : ,

நாகார்ஜுனா நிறுவனத்திலிருந்து நான் விலகி, இரண்டு மாதம் ஆகிவிட்டது. நாகார்ஜுனா சுத்திகரிப்பு நிறுவனத்தால் (Nagarjuna Oil Corporation Limited) கடலூர் மாறப்போகிறது, கடலூர் மக்கள் பயன் பெறப்போகிறார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. ஒரு அருமையான திட்டம் காலதாமதத்தினால்  ஏராளமானோர் நொந்து போய் உள்ளனர்.


கட்டுமானப்பணி, நிறுவனப் பணிகள், பாதியிலேயே நிற்பதினால் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. இதில் பணிபுரியும் பொறியாளர், மற்றும் நிர்வாக பணியாளர்கள் வெளியேறிய வன்னம் உள்ளனர்.


கடந்த 14 வருடங்களாக இதோ, அதோ வந்துவிடும், இன்னும் சில மாதங்களில் வந்துவிடும் என்ற நம்பிக்கையில்  காலம் சென்று கொண்டிருக்கிறது.
இதன் சிறப்பம்சமே, இதன் அமைப்புத்தான், கடலோரத்தில் அனைத்து வசதிகளுடன் இருக்கும் ஒரு அருமையான நில வடிவமைப்பு.நெய்வேலிக்கு அடுத்தபடியாக அதிக
பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக இது உருவாகலாம்.


இங்கு சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் மூலம் டீசல், பெட்ரோல், சமையல் வாயு(LPG) சுற்றி உள்ள அனைத்து மக்களுக்கும் உடனடியாக கிடைக்க இயலும்.


இன்னும் காலம் கடந்தால் , நிறைய இழப்பு ஏற்படும்…..கடலூர் காத்துக் கொண்டிருக்கிறது.

படம் உதவி:கூகுள், www.nocl.co.in & www.hydrocarbons-technology.com