யார் தான் குற்றவாளி- தி.மு.க-வின் புதுமொழி?

Category :

கைது செய்யப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
ஊழல் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விட மாட்டார்,

கொலை செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
திருட்டு செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

பொய் சொன்னதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
வன்புணர்வு (கற்பழிப்பு) செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

விபச்சாரம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
குற்றம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

அப்ப யார் தான் குற்றவாளி?
கேள்வி கேக்குற மக்கள் தான்?

படம் உதவி:டூன்பூல்.காம்,பதிவர் சதிசு,கூகுள் படம்

கடிதம் கலைஞருக்கு எழுதியது!

Category :

உங்கள் பொய்களைச்
சுமந்து செல்ல முடியவில்லை ;


கடிதம் போடுகிறீர்,போய்ச் சேருமிடமோ
புதுடில்லி குப்பைத் தொட்டி.

தயவுசெய்து அடுத்தக் கடிதத்தை
"சிங்களவனுக்கு" அனுப்புங்கள்,
பொய்யுடன் பொசுங்கிப் போகிறேன்?

பூக்கிறது புதிய நாடு-தென் சூடான்

Category :

உலகின் புதிய நாட்டை உருவாக்கி சாதனை படைத்த சூடானிய மக்கள் மிகுந்த
மகிழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.


கடந்த 09-01-2011 முதல் 15-01-2011வரை நடந்த வாக்குப்பதிவில் 98%பேர் தனிநாட்டுக்கான வாக்கை செலுத்திருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென் சூடானுக்கு ஒரு கண்ணீர்க் கதை உண்டு.எப்படி ஈழத்தமிழன்
பிரிட்டிசு காலனி ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டானோ அவ்வாறு. ஆப்ரிக்காவின் பெரிய நாடு சூடான்.வடக்கில் முசுலிம் மதத்தினர் பெரும்பான்மையாகவும்
தெற்கில் கிருத்துவ மதத்தினரும் வாழ்கின்றனர்.


ஆங்கிலேயர் தன் வசதிக்காக தெற்கு, வடக்கு சூடானை இணைத்து ஆட்சி
புரிந்து விட்டு,போகும்போது வடக்கு சூடானிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து
விட்டு வெளியேறினர்.அப்போதே தென் சூடானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும்
ஆளுமை இன்மையால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.ஏனெனில் இரு சூடானுக்கும் மொழி,பண்பாடு மற்றும் கலாச்சாரம் வேறுபட்டது.

அதன்பின் நடந்தது முப்பது வருட உள்நாட்டு யுத்தம்....லட்சக்கணக்கான மக்கள் பலிகடா ஆயினர்.

இங்கிலாந்து நாட்டின் காலனியாதிக்கத்தில் சூடான் இருந்தது சுமார் 57 ஆண்டுகள்.400 மொழிகளுக்கு மேல் பேசப்பட்டு வந்தாலும் பெரும்பான்மையானோர் பேசுவது அரபி மற்றும் ஆங்கிலம் மட்டுமே.சூடான் விடுதலை பெற்றது 01- சனவரி 1956.

கடைசியாக 2002 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான பேச்சுவார்தையின் முடிவாக
மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த உடன்பாடு ஏற்பட்டது.ஐ.நா வின் சிறப்பு குழுவினரால் இந்த வாக்கெடுப்பு சனவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது கடைசி வெற்றி அறிவிப்புக்காக காத்திருகின்றனர்.

தென் சூடானின் சுதந்திர அறிவிப்பு வெளியிடும் நாள் 14-பிப்ரவரி- 2011. அன்று
உலகின் புதிய நாடாக உலா வரப்போகிறது தென் சூடான்.

வாழ்த்துகள் தென் சூடான்.

நன்றி:கீற்று.காம்,எழுத்து:எண்ணத்துப்பூச்சி
படம் உதவி:AFP

அடையாளம் இழக்கும் தமிழன்?

Category :

தமிழர் திருநாள் “பொங்கல் விழா” தொலைக்காட்சி விழாவாக மாறிவிடுமோ எனக் கவலை கொள்ள வைக்கிறது.
தமிழனுக்கு தொடர்பில்லாத “தீபாவளி”யை தூக்கிவைத்து கொண்டாடும் தமிழன், தன் விழாவான பொங்கலை மறந்தது ஏன் என்று புரியவில்லை? தமிழன் தன் வரலாற்றை மறந்ததும் வேதனையான நிகழ்வாகும்.

இந்தி”யத்தினால் தமிழன் அடையாளம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ,அவர்களின் மொழி,பண்பாடு அழியாமல் காப்பதுதான் நாகரிக மனிதனின் செயல்.
தமிழன் வேறு இனத்திற்கும், மொழிக்கும் எதிரி அல்ல.ஆனால் தமிழன் சொரணை அற்றவன் என்று அடித்தளத்தினை அழிக்க முனைந்தால் அது இந்தியா போன்ற கூட்டாட்சி அரசுக்கு நல்லதல்ல.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கூட தன் உற்சாகத்தை இழந்து கொண்டுள்ளதை அனைவரும் அறிவர்.

இந்த வருடம் பொங்கல் வாழ்த்து அட்டை வாங்க கடலூர், புதுச்சேரி என அலைந்தும் ஒரு சில அட்டைகளை மட்டுமே வாங்க முடிந்தது. அதுவும் வாழ்த்து ஆங்கிலத்தில் தான் இருந்தது. பார்த்தவுடன் நொந்து போனேன்… தமிழன் தன் உறவுக்கு அனுப்பும் வாழ்த்தும் ஆங்கிலத்தில்.

பத்து ஆண்டுகளுக்கு முன் சாலையெங்கும் விற்ற வாழ்த்து அட்டைகள் இன்று மறைந்துவிட்டன. கணணி உலகத்தில் அனைத்தும் மின் வாழ்த்தாய் அமைந்துவிட்டது என்றாலும் , வாழ்த்து அட்டைக்கு எதுவும் ஈடாகாது,வீட்டினர் அனைவரும் பார்த்து மகிழ வாழ்த்து அட்டையால் மட்டுமே முடியும்.
இதில் கொடுமை என்னவென்றால் காதலர் தினத்துக்கு ஏராளமான கடைகளின் வாழ்த்து அட்டை விற்கப்படுகிறது.

தமிழன் இனியும் தூங்கிக்கொண்டும், தொலைக்காட்சிக்கும் அடிமையாக இருந்தால்…..வரலாறு சிரிக்கும் நம் இனத்தைப் பார்த்து.

நம் பக்கத்து (தண்ணீர் தராத ) மாநிலமான கேரளாவின் மலயாளத்தினர் எப்படி திரு”ஓணம்”பண்டிகையை கொண்டாடுகின்றனர் எனப் பார்த்து அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

மதம்,சமயம் கடந்து தன் இனத்தின் விழாவாக மலயாளிகள் ஓனம் கொண்டாடும் போது நாம் ஏன் விமரிசையாக பொங்கலைக் கொண்டாட கூடாது?

அடுத்த ஆண்டாவது அனைத்து தமிழர்களும்(மதம் கடந்து) தமிழர் திருநாளைச் சிறப்பாக கொண்டாட முயற்சிப்போம்.

எழுத்து:எண்ணத்துப்பூச்சி
நன்றி:தமிழ்ச்சரம்.காம்

சவுக்கு.நெட்-தமிழ்நாட்டின் விக்கிலீக்ஸ்?

Category :

ஆமாம், எத்தனை பேருக்கு தெரியும் தமிழ்நாட்டிலும் ஒரு விக்கிலீக்சு(Wikileaks) அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் கலங்க வைப்பதை, கலங்க வைத்துக் கொண்டிருப்பதை.

இந்த தளம் தமிழக மக்கள் உரிமைக் கழகம்(www.savukku.net) என்ற
போர்வையின் கீழ் இயங்குகிறது.நிறைய உண்மைகளை
வெளியிட்டு அதிகார வர்க்கத்தினரை கழிசல் புடுங்க வைத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் இதன் பொறுப்பாளர் ஒருவரை கைது செய்து மிரட்டியும் பார்த்துவிட்டனர்.ஆனாலும் நாளுக்கு நாள் இதன் புலனாய்வு செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளன.

விக்கிலீக்சு தனது கொள்கையில் மிகவும் நேர்மையான முறையில் செயல் படுகின்றனர்.குறிப்பாக பொய் செய்தியை ஊக்குவிப்பதே இல்லை.அனைவரும் தன்னார்வலர்கள்,காசுக்காக மனசாட்சியை விற்க்கும் சாதாரண ஊடகக்காரன் அல்ல.
அமெரிக்கா எத்தனையோ மாதம் முயற்சி செய்தும் இன்றுவரை அவர்களின் "செர்வர்களைக்"(Server)கூட அடையாளம் காண முடியவில்லை.அதன் நிறுவனர் ஒரு கணிணிப்புலி என்பதால் சங்கேத மொழியிலே உலக கணிணி செர்வர்களில் தகவல்கள் இருந்தும் அதனை காணமுடிவதில்லை.
இங்கே நம் சவுக்கு.நெட் உண்மையை புட்டு வைக்கத் தான் பாடுபடுகிறது என்ற போதிலும் அது தனி மனித தாக்குதலிலும் ஈடுபடுவதினால் அதன் நியாயம் தர்மம் சோதனைக்குள்ளாகிறது.இணையதளத்தின் தலைப்பில் உள்ள தமிழீழத்தின் தலைவர் பிரபாகரனின் படம் அவசியமில்லாதது.தமிழகத்தின் நிறைய இதழ்கள்,வார ஏடுகள் காசு பார்க்கத்தான் அந்தத் தலைவனின் படத்தைப் போட்டு சம்பாதிக்கின்றனர்.
ஆனால் இந்தமாதிரி மக்களுக்கான ஊடகங்கள் இருந்தால் தான் அரசியல் வாதிகள், காசுக்கும்,சொகுசுக்கும் மயங்கும் அதிகாரிககள் ஒழுங்காக நடக்க முயல்வார்கள்.

எந்த ஊடகத்தின் பணியும் சமுக அக்கறையுடன், மனித முன்னேற்றத்துக்கு
பாடுபடுவது தான்.ஆனால் பெரும்பான்மையான ஊடக முதலாளிகள் , வர்த்தக நிறுவனங்களின் பங்குதாரர்களாகவும், தரகர்களாகவும் உள்ளதால் உண்மைகள் அனைத்தும் வருவதில்லை.

தமிழ்-ஆங்கில ஊடக அக்கிரமங்கள்

Category :

சமீக காலமாக இந்திய ஊடங்களின் செயல் வரையறை மீறி காசு பார்ப்பதையே குறிக்கோள் என்பதையே தெளிவாக காண்பிக்கிறனர். இடைத்தரகர் நீரா ராடியா மற்றும் முன்னாள் அமைச்சர் ராசா உரையாடல்

இந்தி ஊடகங்களில் சினிமா மாதிரி போட்டுகாட்டினர்.

இதன் மூலம் அனைத்து ஊடகங்களின் உண்மையான முகம் வெளிச்சமானது.


என்.டி.டி.வி(NDTV) பர்கா தத் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ்(Hindustan Times) ன் விர் சிங்வி போன்ற‌ அதிமேதாவி ஊடகவியளாலர்களின் அசிங்க பேரத்தை கேட்க முடிந்தது.அரசியல் கட்சிகளின் புரோக்கர் மாதிரி இவர்களும் செயல்பட்டது அம்பல‌மானது.

எல்லா தொலைக்காட்சி நிறுவ‌ங்க‌ளும் டி.ஆர்.பி(TRP) என‌ப்ப‌டும் மாயைக்கு எதையுமே செய்ய‌ காத்திருக்கிற‌ன‌.வியாபார‌ம் இல்லையென்றால் ந‌ம் வீட்டு ப‌டுக்கையறையில் கூட‌ அவ‌ர்க‌ள் நுழைய‌லாம்.

நம்ம ஊர் ஊடகங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.நித்தியானந்தா,ரஞ்சிதா ஊடல் வீடியோ மூலம் சன் தொலைக்காட்சியும்,நக்கீரன் இதழும் அசிங்கமான முறையில் காசு பார்த்தது நாம் அறிந்ததே.


பத்திரிகை தர்மம் என்று பெயருக்குத்தான் உள்ளது.நிறைய ஊடகங்கள் கட்ட பஞ்சாயத்து செய்தும்,அரசியல்வாதியுடன் உறவாடியும் காரியம்
சாதித்துக்கொள்கின்றன.
தற்போது கூட நடிகர் விஜயகுமார் குடும்ப பிரச்சினையில் உள்நுழைந்து ஏதாவது அசிங்கம் கிடைக்காதா என நாக்கை தொங்க போட்டுக் கொண்டு
காத்துக்கிடக்கின்றனர்.

கடைசியாக ஒரு கொடுமை நடந்தது.ஒரு அறக்கட்டளை விழாவுக்கு நிதி திரட்ட வந்த நடிகை யானா குப்தா(Yana Gupta) ஜட்டிபோடவில்லை என்பதை இந்தி தொலைகாட்சி,பத்திரிகை படமாக்கி அசிங்கப் படுத்திக் கொண்டனர்.ஏமாந்தால் ஜட்டியில் கூட கேமரா வைத்துவிடுவார்கள் இந்த‌ கேவலமான ஊடகங்கள்.அதுவும் இதை செய்தது டைம்ஸ் ஆப் இந்தியா(Times of India),மிட்டே(Mid-day) போன்ற பெரிய ஊடகங்கள்.

பத்திரிகை தர்மம் என்பது தற்போது கடுகளவும் இல்லை.மனித சமுதாயத்தின் நான்காவது தூண் எனப்படும் "ஊடகம்"மக்களுக்கான, மக்கள் மேம்பாட்டிற்க்காகத் தானே தவிர....காசு பார்க்க அல்ல.


ஒரு ஊடகவியளாளன் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை அமெரிக்க ஊடக அமைப்பு விளக்கியுள்ளதை கீழே காணலாம்.

• உண்மையை தேடுதல், த‌ருத‌ல்(Seek Truth and Report It)
• யாரையும் புண்படுத்தாமலிருத்தல்(Minimize Harm)
• தன்னிச்சையாய் பக்கசார்பற்று செய்தி அளித்தல்(Act Independently)
• சமுக பொறுப்புணர்வுடன் அடங்கி செயல்படல்(Be Accountable)

கடையாக விக்கிலீக்ஸ்(wikileaks) என்ற இணையத்தளம் இன்று உலகையே நடுங்கவைப்பதை அனைவரும் அறிவர்.ஆனால் அவர்கள் அசிங்கமான முறையில் எதையும் காசுக்காக வெளியிடவில்லை.


அரசாங்கங்களின் உண்மை முகத்தை கிழித்தெறியத் தான் அதன் நிறுவனர் ஜூலியன்(Julian Assange) பாடுபடுகிறார்.


வாழ்க பத்திரிகையியல்…!


எழுத்து:எண்ணத்துப்பூச்சி
வெளியீடு:பாண்டிச்சேரிபிளாக்.காம்
நன்றி:www.pondicherryblog.com

புதுச்சேரி = குடிச்சேரி‍‍: ஒரு "பார்"வை!

Category :

இன்று காலை ஆறரை மணிக்கு வில்லியனூர் சென்றபோது கண்ட காட்சிகள் அதிர்ச்சியூட்டின.

1.மேட்டுப்பாளையம் சாராயக்கடை/கள்ளுக்கடை:

சுமார் நூறு பேர் உற்சாக பாணம் அருந்திக் கொண்டிருந்தனர்.
காலை தேநீர் கடையில் உள்ள கூட்டத்தை விட இங்கு அதிகம்
இருந்தனர்.முன்பு மாலையில் பணி முடிந்து போகும்போது
குடித்தவன் இன்று முன்னேறி அதிகாலையில் குடிக்கிறான்.
தமிழனின் தலையெழுத்தை இனி யாரும் மாற்றமுடியாது.
வெள்ளைக்காரன் எவ்வளவு குடித்தாலும் யாரையும் முகம்
சுளிக்க வைக்கமாட்டான்.ஆனால் தமிழன் முட்டக் குடித்து
சாக்கடையின் நாற்றத்தை தனதாக்கி கொண்டிருப்பது மனதை
சுடுகிறது.
2.அரும்பார்த்தபுரம் சாராயக்கடை/கள்ளுக்கடை:
இங்கு சுமார் அறுபது முதல் எழுபது பேர் வரை இருந்தனர்.
வியாபாரம் சூடு படிக்க ஆரம்பித்து இருந்தது.
புதுச்சேரியை ஆளும் காங்கிரசு கட்சி குடிச்சேரியாக்கி மக்களை
மேன்மைபடுத்தி இருப்பதை "மார்" தட்டிக் கொள்ளலாம்.

என்ன காரணம்:
ஏன் காலை ஆறு மணிக்கே சாராயக்கடையை மொய்க்கின்றனர்.ஏன் குடும்பம், மனைவி,
குழந்தை என இருந்தும் போதைக்கு அடிமையானது ஏன்?
விடை கிடைப்பது சுலபம்.....குடி கொடுக்கும் போதை தான் அது.
அடித்தட்டு மக்கள் சாராயக்கடை,கள்ளுக்கடைகளை மொய்க்க,
நடுத்தர,மேல் மட்ட மக்கள் சொகுசு வெளிநாட்டு சரக்குகளை
குடிக்கின்றனர்.

மீதி கடைகளை பற்றி அடுத்த முறை எழுதுகிறேன்,அது வரை
போதையுடன் காத்திருங்கள்.