மகாநடிகனும்,பெரியார் மோதிரமும்...?

Category :

நடிகர் சத்தியராஜ்-‍க்கு பெரியார் மோதிரத்தை திராவிடர் கழக
தலைவர் வீரமணி அளித்தாலும் அளித்தார்...அதுபற்றி புளகாங்கிதம் அடைகிறார்கள் சிலர்.உண்மையிலேயே பெரியார் கொள்கைகளுக்கு நேர் மாறானது...இந்த சங்கதிகள்...

பெரியார் அணிந்திருந்த மோதிரத்தை,அடுத்தவர் அணிவதால் என்ன‌ ப‌ய‌ன்? மேலும் இது ப‌குத்த‌றிவிற்கே சவாலான செயலும் கூட‌.சாய்பாபா ப‌ட‌ம் போட்ட‌ மோதிர‌ம் அணிவ‌து மாதிரி.....ஒரு ச‌முதாய‌ சீர்திருத்த‌ ந‌டிக‌னை,நாய‌க‌னை பாராட்ட‌,எத்த‌னையோ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌வே.அய்யா வீர‌ம‌ணி அவ‌ர்க‌ளே ஏன் இந்த‌ த‌டுமாற்ற‌ம்...


என்ன‌ ஆயிற்று...இன‌ முர‌சு ச‌த்திய‌ராஜ்-க்கு....பெரியாராக‌ ந‌டித்த‌த‌ற்காக‌ அளித்தார்க‌ளாம்.இவ‌ர் ஏற்றுக் கொண்டாராம்....அய்யா,இந்த‌மாதிரி மூடப் பழக்கங்களை,பைத்திய‌க்கார‌த் த‌ன‌த்தைத்தானே வாழ்நாள் முழுதும்
எதிர்த்தார் பெரியார்.

ச‌த்தியராஜ் அவ‌ர்க‌ளின் பேச்சினை ஒலிநாடா மூல‌ம் கேட்டு இருக்கிறேன்.மிக‌வும் அருமையான மற்றும் சிந்த‌னையை த‌ட்டி எழுப்பும் பேச்சுக‌ள் அவை.

அனைவ‌ருக்கும் புரியும்ப‌டியான‌,அதே நேர‌த்தில் சுருக்க‌மான‌ பேச்சு ம‌கா ந‌டிக‌னுடைய‌து.அவ‌ர் நிச்ச‌ய‌மாக‌ ப‌குத்த‌றிவை த‌மிழ் ம‌க்க‌ளுக்கு மீண்டும் ஊட்ட‌,பெரும் ப‌ங்கு வ‌கிக்க‌ முடியும்.செய்வாரா தெரிய‌வில்லை....?

கடைசி வெறி:


1.போன‌ வார‌ம் வேலூர்‍ ப‌க்க‌த்தில் ஒரு த‌ங்க‌ கோவில் (300 கோடியில்)க‌ட்டியுள்ளார் ஒரு சாமியார்.அவ‌ர் அந்த‌ த‌ங்க‌த்தை ரிச‌ர்வ் பேங்க் ஆப் இந்தியா(RBI) மூல‌மாக வாங்கினாராம்.அந்த‌ இட‌ம் நூறு ஏக்க‌ர் நில‌த்தில் அமைந்துள்ள‌தாம்.அந்த‌ கோயிலுக்கு கும்பாபிசேக‌ம் ந‌ட‌ந்த‌ போது,பொதும‌க்க‌ளுக்கு அனும‌தி இல்லையாம்.....எல்லாம் வெள்ளை கார‌ணுக்குதானாம்.

என்ன‌மோ ந‌ட‌க்கிறது மக்களே.,...உஷார்....உஷார்....

2.சென்னை கபாலீச்வ‌ர‌ர் கோயில் கோபுர‌த்தை இடி தாக்கிய‌தாம்....கோபுர‌ப‌ட‌த்தை வைத்து ஒரு "பால‌ஸ்தான‌ பூஜை" செய்தார்க‌ளாம்....எப்பா பூஜையை எப்ப வேணாலும் நடத்தலாம்...

மொத‌ல்ல‌ இடி தாங்கி வைங்க‌....மக்கள காப்பாத்துங்க...
(ப‌ட‌ம் சுட்ட‌து:மாலைச்சுட‌ர்)

0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: